பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரியில் பொதுமக்களுக்கான தொழில்.முனைவோர் மேம்பாட்டு திட்டப் பயிற்சி வரும் பிப்.16ல் துவக்கம்


பி.எஸ்.ஜி  கலை அறிவியல் கல்லூரி, கோவை எப் ஐ சி சி ஐ மகளிர் அமைப்பு ஆகியவை இணைந்து தொழில் முனைவோர்களுக்கான மேம்பாட்டு திட்டப் பயிற்சியினை வரும் பிப்ரவரி 16ம் தேதி முதல் நடத்தவுள்ளது.

அகமதாபாத்தை மையமாகக் கொண்டு செயல்படும் இ டி ஐ அமைப்பின் சார்பில் நடத்தப்படும் இந்த பயிற்சியானது தொடர்ந்து 25 நாட்கள் நடைபெறவுள்ளது. என் எஸ் டி இ டி பி, டி எஸ் டி ஆகிய அமைப்புகளும் இந்த திட்டத்திற்கு நிதிவுதவி அளித்துள்ளனர். 

இப்பயிற்சியானது தொழிலை திறம்பட நடத்துவது, நிதி பெரும் திட்டங்கள், தொழிலை தேர்ந்தெடுத்தல் மற்றும் அத்தொழிலின் வளர்ச்சியை அடைதல், தொழில் முனைவோர்களுக்கான திறன், திட்டம் குறித்து அறிக்கை தயாரித்தல், சந்தை குறித்து ஆராய்தல், தொழிலை நிர்வகித்தல் மற்றும் வரி குறித்தான நடைமுறைகள் ஆகியவை குறித்து இப்பயிலறங்கில் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது.

இப்பயிற்சி பெற பி.எஸ்சி, பி.டெக், பிஇ பட்டதாரிகள், அரசு அங்கீகாரம் பெற்ற டிப்ளமோவில் 2 மற்றும் 3 வருட பயிற்சி மேற்கொண்டவர்கள் என 18 முதல் 40 வயது வரை உள்ள அனைத்து தரப்பினரும் பங்குபெறலாம்.

இப்பயிற்சியில் சேர விரும்புவோர் அவர்களது முழு விபரங்களையும் [email protected] என்ற இணையதள முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும் விபரங்களுக்கு 9363104733, 9443760648, 9486710231, 9361333111, 9443338935 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளவும்.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....

பொள்ளாச்சி எம்.பி. மேம்பாடு நிதியில் ரூ.57 லட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக் கடைகள், அங்கன்வாடி மையம் திறப்பு

கோவை மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.5...