பிரதமர் மோடியும், ஜே.பி.நட்டாவும் தமிழ்நாட்டின் மீது சிறப்பு கவனம் செலுத்துகின்றனர் - கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

கோவை விமான நிலையத்தில் பேசிய அண்ணாமலை, நாடாளுமன்ற தேர்தல் பணிகளை பாஜக தமிழகத்தில் இருந்து தான் துவக்கியுள்ளது என்றும், தமிழகத்தின் மீது பிரதமர் மோடியும், பாஜக தேசிய தலைவர் நட்டாவும் கூடுதல் கவனம் செலுத்துவதாகவும் தெரிவித்தார்.



கோவை: தமிழகத்தின் மீது பிரதமர் மோடியும், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவும் சிறப்பு கவனம் செலுத்தி வருவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை வழியனுப்ப வந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்த போது, பேசியதாவது, மேட்டுப்பாளையம் பொதுக் கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் நட்டா பேசியது பாஜகவினரிடையே புதிய உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி தொகுதியில் பாஜக வேட்பாளர்கள் வெற்றி வேட்பாளர்களாக வருவார்கள் என்ற நம்பிக்கையுடன் நேற்றைய விழா நடந்து முடிந்தது. அதை தொடர்ந்து பாஜக தேசிய தலைவர் நட்டா, அன்னூரில் உள்ள இணை தலைவர் வீட்டிற்கு சென்ற பின், இரவு கோவையில் தங்கினார்.

தற்போது இங்கிருந்து ஒடிசா செல்கிறார். எப்போது தேசிய தலைவர் வந்தாலும் தொண்டர்களுக்கு உத்வேகம் தான், தேசிய தலைவர் தமிழகத்திற்கு வருவது புதிது கிடையாது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் சிவகங்கை, மதுரை மாவட்டங்களுக்கு வந்து சென்றார். மீண்டும் வந்துள்ளார்.

தமிழ்நாட்டின் மீது பிரதமர் மோடியும் பாஜக தேசிய தலைவர் நட்டாவும் சிறப்பு கவனத்தை செலுத்தி வருகிறார்கள். குறிப்பாக நாடாளுமன்ற தேர்தல் கூட்டத்தை கூட தமிழகத்தில் இருந்து தான் துவக்கியுள்ளனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...