நீலகிரி கூடலூரில் மளிகை கடையில் இருந்து ரூ.1.25 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட குட்கா பறிமுதல் - உரிமையாளர் கைது

கூடலூர் அருகே மளிகை கடையில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த ரூ.1.25 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட குட்காவை பறிமுதல் செய்த போலீசார், உரிமையாளர் முருகானந்தம் என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.



நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள ஸ்ரீ மதுரையை சேர்ந்தவர் முருகானந்தம். இவர் அதே பகுதியில் மளிகை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில், அந்த மளிகை கடையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக கூடலூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதன் அடிப்படையில், அங்கு சென்ற கூடலூர் டி.எஸ்.பி மகேஷ்குமார் தலைமையிலான போலீசார் முருகானந்தத்தின் கடை மற்றும் குடோனில் சோதனை செய்தனர். அப்போது, மளிகை கடையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.



இதையடுத்து, மளிகை கடை உரிமையாளர் முருகானந்தத்தை கைது செய்த போலீசார் அவரை கூடலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட குட்காவின் மதிப்பு ரூ.1.25 லட்சம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) பல்வேறு பகுதிகளில் மின்தடை

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) பராமரிப்பு: 6 பகுதிகளில் மின்தடை

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் கரைய...

குனியமுத்தூர் துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) மின்தடை

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் க...

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) மின்தடை

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறும் என...

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல வளர்ச்சி திட்டங்களை ஆணையர் கட்டா ரவி தேஜா நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தெற்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், டெங்கு ஒழிப்பு, சுகாதார மைய கட்டுமானம், டயாலிச...