நீலகிரி கூடலூரில் மளிகை கடையில் இருந்து ரூ.1.25 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட குட்கா பறிமுதல் - உரிமையாளர் கைது

கூடலூர் அருகே மளிகை கடையில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த ரூ.1.25 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட குட்காவை பறிமுதல் செய்த போலீசார், உரிமையாளர் முருகானந்தம் என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.



நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள ஸ்ரீ மதுரையை சேர்ந்தவர் முருகானந்தம். இவர் அதே பகுதியில் மளிகை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில், அந்த மளிகை கடையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக கூடலூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதன் அடிப்படையில், அங்கு சென்ற கூடலூர் டி.எஸ்.பி மகேஷ்குமார் தலைமையிலான போலீசார் முருகானந்தத்தின் கடை மற்றும் குடோனில் சோதனை செய்தனர். அப்போது, மளிகை கடையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.



இதையடுத்து, மளிகை கடை உரிமையாளர் முருகானந்தத்தை கைது செய்த போலீசார் அவரை கூடலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட குட்காவின் மதிப்பு ரூ.1.25 லட்சம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...