பன்னீர் செல்வம் முதல்வராக இருக்க வேண்டும் என்பதே தமிழக மக்களின் விருப்பம் என கோவை முன்னாள் மேயர் ராஜ்குமார் பேட்டி


மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அளிக்க வேண்டும் எனவும், பன்னீர் செல்வம் முதல்வராக இருக்க வேண்டும் என்பதே அனைத்து அ.தி.மு.க தொண்டர்களின் விருப்பமாக இருக்கின்றது எனவும் கோவை முன்னாள் அ.தி.மு.க மேயர் ராஜ்குமார் வலியுறுத்தியுள்ளார்.



கோவை முன்னாள் அ.தி.மு.க  மேயர் ராஜ்குமார் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது தமிழக முதல்வராக இருக்கும் பன்னீர் செல்வத்தை ஆதரிப்பது என முடிவு செய்து இருப்பதாகவும், கோவை மாநகரில் உள்ள கட்சி  நிர்வாகிகள் அனைவரும் அவரை ஆதரிக்க போவதாகவும் தெரிவித்தார். 

சட்டமன்ற உறுப்பினர்கள் கட்டாயப்படுத்தி கடத்தப்பட்டு இருப்பதாகவும், இது ஜனநாயக விரோத போக்கு எனவும் அவர்களை மீட்க வேண்டும் என தெரிவித்தார்.

சட்டமன்ற உறுப்பினர்கள் செல்போன்கள் அனைத்து வைக்கப்பட்டு இருப்பதாகவும், அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை எனவும் தெரிவித்த அவர், விரைவில் கோவையில் உள்ள ஆதரவாளர்கள் பட்டியலுடன் சென்னை சென்று பன்னீர் செல்வத்தை சந்திக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.

அ.தி.மு.க கட்சிக்காரன் என்ற உணர்வுடன் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்ட முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரிப்பதாக தெரிவித்த அவர், ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை கமிசன் அமைக்கப்பட இருப்பது வரவேற்கத்தக்கது என கூறினார்.

மேலும், கொடநாடு எஸ்டேட்டினை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அளிக்க வேண்டும் எனவும், முதல்வராகும் தகுதி  பன்னீர்செல்வத்திற்கு மட்டுமே இருக்கின்றது எனவும் கோவை முன்னாள் மேயர் ப.ராஜ்குமார் தெரிவித்தார்.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....

பொள்ளாச்சி எம்.பி. மேம்பாடு நிதியில் ரூ.57 லட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக் கடைகள், அங்கன்வாடி மையம் திறப்பு

கோவை மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.5...