ரபேல் வாட்சை வைத்தே தமிழகத்தில் 25 எம்.பிக்களை பெற்றுவிடலாம் - கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

கோவை சுந்தராபுரத்தில் நடைபெற்ற முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 98வது பிறந்தநாள் விழாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, திமுகவின் ஊழல் குறித்து புகார் அளிக்க வலைத்தளம் அறிமுகம் செய்ய உள்ளதாக தெரிவித்தார்.



கோவை: கோவை மாவட்டம் சுந்தராபுரம் பகுதியில் பாஜக மற்றும் அரிமா சங்கம் சார்பில், மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 98வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 98 நபர்களுக்கு காது கேட்கும் கருவி மற்றும் செயற்கை கால்கள் வழங்கும் விழா நடைபெற்றது.



இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பயனாளிகளுக்கு காது கேட்கும் கருவி மற்றும் செயற்கை கால்களை வழங்கினார்.



இதனைத் தொடர்ந்து மேடையில் பேசிய அண்ணாமலை, ஆண்டவன் எங்கள் மூலமாக மாற்றுத்திறனாளிகளுக்கு உதவ வைக்கிறார். உண்மையான மனிதத்தை பார்க்க நலத்திட்ட உதவிகள் தான் தேவை.



நலத்திட்ட உதவியாக இருந்தாலும் அரசியல் பேசாமல் இருக்க முடியாது. திமுக வந்த பிறகு பாஜகவிற்கு எழுச்சி ஏற்பட்டு உள்ளது. அதுவும் எப்போதும் இல்லாத ஒரு எழுச்சி. ஊழலைப் பற்றி பேச ஒரு தராதரம் வேண்டும்.

பொதுமக்கள் திமுகவின் ஊழல் தொடர்பாக புகார் அளிக்க வலைத்தளம் ஒன்றை தயாரிக்க உள்ளோம். தமிழ்நாடு முழுவதும் திமுக அமைச்சர்களின் பினாமி யார் என்று கண்டுபிடிக்க இந்த அப்ளிகேஷன் மூலம் பொதுமக்கள் ஒரு புகைப்படம் எடுத்து பதிவு செய்யலாம்.

முதலமைச்சரின் குடும்பத்தை பற்றி பேச யாருக்கும் தைரியம் இல்லை. ஆனால் நமக்கு தைரியம் உள்ளது. டீக்கடையில் பேசும் பொழுது தான் அரசியல் ஆரம்பிக்கிறது.

பாஜகவின் சார்பில் பூத் கமிட்டி அமைக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. Do or Die என்ற சூழலில் நாம் இருக்கிறோம். 2024-ல் திமுக கட்சிக்கு முடிவுரை எழுத முடியும். 25 எம்பிக்கள் வாங்கி விட்டால் திமுக ஆட்சியில் இருந்தால் என்ன இல்லை என்றால் என்ன. திமுக நடைபிணம் ஆகிவிடும்.

தொண்டர்கள் தான் பாஜக வெற்றியை தீர்மானிப்பவர்கள். எனவே, தொண்டர்களே கடுமையாக பாடுபடுங்கள். நீங்கள் வெற்றி பெற வைக்க வேண்டும். விரைவில் பொள்ளாச்சியில் பாஜக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெறும். 2024ஆம் ஆண்டில் பொள்ளாச்சியில் இருந்து திருப்புமுனை வரும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.



இந்த நிகழ்ச்சியில் கோவை மாவட்ட பாஜக நிர்வாகிகள் அரிமா சங்கம் நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...