ஏப்ரலில் முழு வரவு செலவு கணக்குகளையும் வெளியிடுகிறேன் - திருப்பூரில் பாஜக தலைவர் அண்ணாமலை

திருப்பூரில் பாஜக சார்பில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக தலைவர் அண்ணாமலை, அமைச்சர் செந்தில் பாலாஜியின் வாட்ச் வாங்கிய ரசீது குறித்த கேள்விக்கு, ஏப்ரல் மாதத்தில் முழு வரவு சில கணக்குகளையும் வெளியிட உள்ளதாக தெரிவித்தார்.


திருப்பூர்: திருப்பூர் கோவில் வழி பகுதியில் பாஜக வீரபாண்டி மண்டலம் சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இதில் பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார்.



இந்த நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் அண்ணாமலை பேசியதாவது, காங்கிரஸ் கட்சியினரின் பேச்சுக்கள் அவதூறாக மாறி வருகிறது. இருப்பினும் நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற குழு தலைவர் மல்லிகார்ஜுன கார்கே எழுப்பிய கேள்விக்கு நிச்சயம் பாரதிய ஜனதா கட்சி அமைச்சர்கள் பதில் அளிப்பார்கள்.

ராகுல் காந்தி மேற்கொண்ட நடைபயணம் என்பது வாக்கிங் எக்சர்சைஸ் தான். அது ஜோடோ யாத்திரை அல்ல தோடா யாத்திரை இந்தியாவை பிளவுபடுத்தும் யாத்திரை.

ராகுல்நடை பயணத்தின் வெற்றி குஜராத் தேர்தலிலேயே தெரிந்தது ஒரு தொகுதியில் கூட காங்கிரசால் முழுமையான வெற்றியை பெற முடியவில்லை.

பாரதிய ஜனதா மேற்கொள்ள இருக்கின்ற நடைபயணம் என்பது தமிழ்நாடு முழுவதும் சாமானிய மக்களை சந்தித்து அவர்களுடன் தங்கி அவர்களது பிரச்சனைகளை கேட்டு அறிந்து 1 வருட காலம் அவர்களுடனே ஒன்றினைய மேற்கொள்ளப்படும் நடைபயணம்.

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பில் மட்டுமல்ல எனது முழு வரவு செலவு கணக்கையும் ஏப்ரல் மாதத்தில் தாக்கல் செய்கிறேன். அடுத்த மாதத்தில் ஒரு இணையதளம் தொடங்கி திமுக எம்எல்ஏ துவங்கி அமைச்சர் வரையிலான ஊழல் பட்டியலில் வெளியிட இருக்கிறோம்.

இலவச தொடர்பு எண்ணை அறிமுகம் செய்து அந்தந்த பகுதியில் திமுக பினாமிகள் சேர்த்து வைத்த சொத்து பட்டியலையும் பொது மக்களாகவே தெரிவிக்கும் வகையிலான ஏற்பாடுகளை செய்ய இருக்கிறோம்.

சாமானிய மக்களை பார்த்து ஆட்சியில் இருப்பவர்கள் கேள்வி கேட்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதேபோல் எம்ஜிஆரை கேள்வி கேட்டு இருக்கிறார்கள் இன்று என்னை கேட்கிறார்கள்.

முதலமைச்சரின் குடும்பம் மற்றும் 13 அமைச்சர்களின் பட்டியலை தயார் செய்து உள்ளோம் இதில் 2 லட்சம் கோடி ஊழல் வெளி வந்துள்ளது.

திமுக தொட்டுவிட்டார்கள் முடிவுரை பாஜக எழுத இருக்கிறது. 2ஜி ஊழலால் திமுக மற்றும் காங்கிரசுக்கு முடிவுரை எழுதப்பட்டதோ, அதேபோல் நாங்கள் கேட்கும் கேள்வி திமுகவிற்கு முடிவுரை எழுதும்

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் அண்ணாமலை வழங்கினார்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...