அவினாசிலிங்கம் பல்கலை கழகத்திற்கும் தென் கொரிய ஜிஜூ தேசிய பல்கலை கழகத்திற்கும் இடையே புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து


கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும்  அவினாசிலிங்கம் பல்கலை கழகத்திற்கும், தென் கொரியாவில் செயல்பட்டு வரும் ஜிஜூ தேசிய பல்கலை கழகத்திற்கும் இடையே புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் தற்பொழுது கையெழுத்திடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தமானது வரும் 5 வருடங்கள் வரை செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



இந்த ஒப்பந்தத்தின் நோக்கமானது ஒருங்கிணைந்த ஆராய்ச்சி, பயிற்சிக்காக மாணவர்கள் பரிமாற்றம், சர்வதேச நிதி வழங்கும் நிறுவனங்களுக்காக திட்டங்களை தயாரிப்பது உள்ளிட்டவை ஆகும்.

ஜிஜு பல்கலைக் கழகத்தின் விலங்கியல் பயோ டெக்னாலஜி பேராசிரியரும், தேசிய முதன்மை ஆலோசகருமான முனைவர் மின்தேசன் இந்திய மாணவியரின் பயோ டெக்னாலஜி துறையில் வளர்ச்சியை கண்டறிந்துள்ளார். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திற்கு உறுதுணையாக செயல்பட்டுள்ளார். 

அவர் ஆலோசகராக இருந்த காலத்தில் கொரியாவில் உள்ள பல முன்னணி பல்கலைக் கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாவதற்கு உதவியுள்ளார். 

அவினாசிலிங்கம் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் ஜினோமிக்ஸ், மெட்டாபோலோமிக்ஸ் மற்றும் மருத்துவ குணமுள்ள தாவரங்களின் பன்புகளைக் குறித்து குறுகிய மற்றும் நீண்ட கால பயிற்சிகளை பெற இந்த ஒப்பந்தத்தின் மூலம் வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது.

தற்பொழுது பல்கலை கழகத்தின் பதிவாளராக உள்ள எஸ்.கவுசல்யா இதுபோன்ற புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் பயனடைந்தவர் ஆவார்.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் மூன்று மாணவிகள் கல்வி உதவித் தொகையுடன் ஜின்செங் குறித்து ஆராய்ச்சி செய்ய தேர்வாகியுள்ளனர். 6 முதுகலை மாணவிகளும், 2 ஆராய்ச்சி மாணவிகளும் தங்களுடைய ஆராய்ச்சியினை கொரியாவில் தொடங்க வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆராய்ச்சியினை மேற்கொள்ள அவர்களுக்கு முழு உதவிகளும் வழங்கப்படும்.

விலங்கியியல் பயோ டெக்னாலஜி, நியூட்ரிஜீனோமிக்ஸ், ப்ளேன்ட் ஜீனோமிக்ஸ் மற்றும் உணவு தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் ஆசிரியர்களும், மாணவிகளும் இணைந்து பணியாற்றுவர்.

மேலும், இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் இளங்கலை படிப்பு பயிலும் மாணவிகளுக்கு கொரியாவில் சென்று படிப்பதற்கான வாய்ப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....

பொள்ளாச்சி எம்.பி. மேம்பாடு நிதியில் ரூ.57 லட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக் கடைகள், அங்கன்வாடி மையம் திறப்பு

கோவை மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.5...