தொடரும் வறட்சியும், விவசாயிகள் மரணமும்- நடவடிக்கை எடுக்குமா மத்திய, மாநில அரசுகள் ?


தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக பருவமழை பொய்த்துப் போனதைத் தொடர்ந்து பல லட்சம் விவசாய நிலங்கள் வறட்சியின் பிடியில் சிக்கியுள்ளது.

மேலும், குடிநீருக்குக்கூட தற்போது பஞ்சம் ஏற்பட்டு வருவதால் மக்கள் பெரும் சிறமங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

வறட்சியினால் விவசாயம் பொய்த்துப்போனதால் தற்போது வரை தமிழகத்தில் கடந்த சில மாதங்களில் மட்டும் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மன வேதனையில் உயிரிழந்துள்ளனர்.

இதனைத் தடுக்கக் கோரியும், விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரியும் விவசாய சங்கங்கள், விவசாயிகள், பொதுமக்கள் என பல தரப்பினர் கோரிக்கை விடுத்துவந்தாலும் தற்போது வரை மத்திய, மாநில அரசுகள் இதுகுறித்து முழுத்தீர்வினை எட்டவில்லை.

இந்நிலையில், தற்போது ஈரோடு மாவட்டம் பவானி அருகே நெரிஞ்சிபேட்டை என்னும் பகுதியில் தனது விவசாய நிலத்தில் 2 ஏக்கர் பரப்பிலான பருத்தி செடி வறட்சியின் காரணமாக காய்ந்து போனதை கண்டு மனவேதனையில் ராஜேந்திரன் என்ற விவசாயி மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தினையும், அரசு நிர்வாகத்தின் மீது அதிருப்தியினையும்  ஏற்படுத்தியுள்ளது. இனியும் வறட்சியின் காரணத்தால் விவசாயிகள் உயிரிழப்பதை தடுக்க மாநில அரசும், மத்திய அரசும் முன்வர வேண்டும் என தமிழக விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....

பொள்ளாச்சி எம்.பி. மேம்பாடு நிதியில் ரூ.57 லட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக் கடைகள், அங்கன்வாடி மையம் திறப்பு

கோவை மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.5...