ஜி.ஆர்.டி கல்லூரியில் மாணவர்களுக்கான சிந்தனை குறித்த விளம்பர பிரச்சாரம் நிகழ்வு

ஜி.ஆர்.டி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்களின் சமூக விழிப்புணர்வு சார்ந்த சிந்தனை விளம்பர பிரச்சாரம் நிகழ்வுகள் நடைபெற்றது. இதனை கல்லூரி முதல்வர் சாந்தா தொடங்கி வைத்தார். காட்சி தொடர்பியல் துறை தலைவர் ராதா தலைமை தங்கினார். 

 



இதில், சமூகத்தில் ஒதுக்கப்பட்ட பல்வேறு நிலைகளை மாணவர்கள் சமூக விழிப்புணர்வு மூலமாக இந்நிகழ்வில் நடத்தினர். அதில் நஷ்டா என்னும் காலை உணவுகள் குறித்தும், லைட்ஸ் அவுட் என்னும் வாகனத்தில் இரவு நேரங்களில் செல்லும் போது எதிரே வரும் வாகனங்களில் தொலைதூர ஒளி ஆபத்து குறித்தும், ஓரம் போ என்னும் சாலை பாதுகாப்பு குறித்தும், வாகனம் ஓட்டும் போது மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல் தவிர்த்தல், ஃபிட் ஓ ஃபிட் உடற்பயிற்சி, அழகு சாதனம் பொருட்கள் மூலம் ஏற்படும் தீங்குகள், உணவில் இருக்கும் கலப்படம், பணமதிப்பு இழப்பை குறைத்தல், சுற்றுசூழல் மாசு கட்டுப்படுத்துதல் போன்றவற்றை விளக்கும் வகையில் பல்வேறு சிந்தனை விளம்பர பிரச்சாரம் நிகழ்வுகள் மாணவர்கள் தயாரித்தும் அதனை மற்ற மாணவர்களுக்கு விளக்கி கூறினார். மேலே குறிப்பிடப்பட்ட தலைப்புகள் பற்றிய விழிப்புணர்வை உருவாக்க விளையாட்டுக்கள் மற்றும் கடைகள் போன்றவற்றை ஜி.ஆர்.டி கல்லூரி மாணவர்கள் நிகழ்வின் ஒரு பகுதியில் இதனை நடத்தினர்.



இது குறித்து பேராசிரியர் மோகனசுதன் சிம்பிளிசிட்டி நிருபரிடம் பேசுகையில்; முதலாம் ஆண்டு காட்சி தொடர்பியல் துறை மாணவர்களுக்கு இதுபோன்ற நிகழ்வுகள் கற்பிக்கப்படுகிறது. இதை தொடர்ந்து மாணவர்களுக்கு திட்ட வேலைகள் அளிக்கப்படுகிறது. மேலும் இதனை சமூக பணிக்காக நடத்துவதற்க்காக திட்டமிடப்பட்டது. இந்த சமூக விழிப்புணர்வு சார்ந்த சிந்தனை விளம்பர பிரச்சாரம் நிகழ்வுகள் காட்சி தொடர்பியல் துறை மாணவர்களுக்கு அறிவுத்திறன் பெருகுவதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் இது சமூக மாற்றத்தினை கொண்டுவருவதற்கும் உதவும் என்றார். 





Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....

பொள்ளாச்சி எம்.பி. மேம்பாடு நிதியில் ரூ.57 லட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக் கடைகள், அங்கன்வாடி மையம் திறப்பு

கோவை மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.5...