தமிழ்நாடு ஹோட்டல்கள் புதுப்பிக்கப்படுவதால் அதிக வருவாயை ஈர்க்க முடியும் - கோவையில் சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன்

காந்திபுரம் தமிழ்நாடு ஹோட்டலில் புனரமைக்கப்பட்ட உணவகத்தை திறந்து வைத்த அமைச்சர் மதிவேந்தன், தமிழக அரசின் சார்பில் முதல் முறையாக பொள்ளாச்சி அடுத்த ஆச்சிப்பட்டியில் பலூன் திருவிழா நடைபெறவுள்ளதாக தெரிவித்தார்.



கோவை: கோவை மாவட்டம் காந்திபுரம் தமிழ்நாடு ஹோட்டலில் புனரமைக்கப்பட்ட உணவகத்தை சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் திறந்து வைத்தார். அதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசியதாவது, கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தமிழ்நாடு ஹோட்டல் புனரமைக்கப்பட்ட உணவகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.



தமிழக முதல்வர் உத்தரவின் பேரில் சுற்றுலா துறையின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு ஹோட்டல் உள்ளிட்ட சுற்றுலா தளங்கள் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக சென்னை தீவுத்திடல் தமிழ்நாடு ஹோட்டல் உணவகம், கோவை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள உணவகங்கள் புதுப்பிக்கப்பட்டு வருகிறது.

மேலும் தமிழ்நாடு ஹோட்டல் உணவகங்களில் புதிய உணவு வகைகளையும் அறிமுகப்படுத்த உள்ளோம். இந்த காலகட்டத்தில் தனியார் விடுதிகளுடன் போட்டியிடும் வகையில், அரசுக்கு சொந்தமான தமிழ்நாடு ஹோட்டல்கள் புதுப்பிக்கப்படுவதால் அதிக வருவாயை ஈர்க்க முடியும்.

தமிழக முதல்வர் உத்தரவின் பேரில் முதல் முறையாக சுற்றுலா தளம் மேம்பாட்டு திட்டம் அறிமுகப்படுத்தி உள்ளோம், இதன் முலம் 10 முதல் 15 இடங்களை தேர்வு செய்து, அங்கு பல்வேறு வசதிகளை மேம்படுத்தி வருகிறோம். குறிப்பாக கொள்ளிமலை, ஜவ்வாது மலை, ஏலகிரி, பூண்டி உள்ளிட்ட ஏரிகள், பூம்புகார் ஆகியவையும் புதுப்பிக்க உள்ளோம்.

இது வரை தனியார் சார்பில் பலூன் திருவிழா நடத்தப்பட்டது. முதல் முறையாக பொள்ளாச்சி அடுத்த ஆச்சிப்பட்டியில் தமிழ்நாடு அரசு சார்பில் பலூன் திருவிழா நடைபெற உள்ளது. இந்நிலையில்,பலூன் திருவிழாவிற்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தை இன்று ஆய்வு செய்கிறோம். இந்த பலூன் திருவிழாவில்மாலை நேரத்தில் இசை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு ஆனைக்கட்டியில...

கோவை கவுண்டம்பாளையத்தில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம் - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கவுண்டம்பாளையம் ஜீவா நகரில் 110 ஏக்கரில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மா...

புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் ஐரோப்பாவை அசத்திய குமரகுரு மாணவர்கள்; 3 விருதுகள் வென்று சாதனை..!

இங்கிலாந்து, மொனாக்கோ மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை போட்டிகளில், கோவை குமரகுர...