வால்பாறை எஸ்டேட் பகுதியில் யானைகள் வீட்டை சேதப்படுத்தியதால் 2 பேருக்கு லேசான காயம்

வால்பாறையில் சமீபகாலமாக யானைகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. இரவு நேரங்கள் மட்டுமின்றி பகல் நேரங்களிலும் கூட பல இடங்களில் முகாமிட்டு தொழிலாளர்கள் குடியிருப்பு மற்றும் ரேசன் கடைகள் ஆகியவற்றை சேதப்படுத்தி வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.

 

இதேபோல் நேற்று இரவு வால்பாறையை அடுத்துள்ள புதுத்தோட்டம் பகுதியில் கள அதிகாரி பார்த்திபன் என்பரவது வீட்டை சேதப்படுத்தியது. வீட்டின் கதவு ஜன்னல்களை உடைத்தது. இதனால் அச்சமடைந்த கள அதிகாரி பார்த்திபன் மற்றும் அவரது மனைவி மற்றும் மகன் வீட்டின் பின்புறமாக வெளியேற முயற்சி செய்தனர். இதில் கள அதிகாரி பார்த்திபனின் மனைவி மற்றும் அவரது மகனுக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர்கள் இருவரும் ஸ்டேன்மோர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.





Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....

பொள்ளாச்சி எம்.பி. மேம்பாடு நிதியில் ரூ.57 லட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக் கடைகள், அங்கன்வாடி மையம் திறப்பு

கோவை மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.5...