இந்திய இறுதி நிலை மருத்துவ சிகிச்சை கூட்டமைப்பின் 24வது சர்வதேச கருத்தரங்கம்- 2017

ஜி.கே.என்.எம் மருத்துவமனை ரக்ஷா ஹாஸ்பைஸ் அமைப்புடன் இணைந்து 2001-ம் ஆண்டு முதல் உயர்தரமான இறுதி நிலை மருத்துவ சிகிச்சைகளை கோவை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சார்ந்த நோயாளிகளுக்கு மிகச் சிறப்பான முறையில் சிகிச்சை அளித்து வருகிறது. ஜி.குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனன மற்றும் கோவை புற்றுநோய் அறக்கட்டளை நிறுவனம் இணைந்து 24வது சர்வதேச இறுதிநிலை மருத்துவ சிகிச்சை கருத்தரங்கத்தினை கோவை கொடிசியா அரங்கில் பிப்ரவரி 1௦-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை நடத்துகின்றன. 

பொதுமக்கள் மற்றும் மருத்துவத் துறையின் மத்தியில் இறுதி நிலை மருத்துவ சிகிச்சை மற்றும் அதன் தேவைகள் குறித்து விழிப்புணர்வினை ஏற்படுத்துவதே இந்த கருத்தரங்கின் முக்கிய நோக்கமாகும். புற்றுநோய், இதயம் மற்றும் சிறுநீரக செயலிழப்பு மற்றும் பக்கவாதம் உள்ளிட்ட உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் உள்ள பல்வேறு நுட்பமான தகவல்களை மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் இந்த கருத்தரங்கின் வாயிலாக பெற முடியும்.

இந்த மாபெரும் கருத்தரங்கில் 1000-த்திற்கும் மேற்பட்ட தேசிய மற்றும் சர்வதேச மருத்துவ நிபுணர்கள் தங்களது அனுபவம் மற்றும் தாங்கள் இத்துறையில் சேகரித்துள்ள அரிய பல தகவல்களை இந்த கருத்தரங்கம் நடைபெறும் மூன்று நாட்களும் அனைவருடனும் பகிர்ந்துகொள்ள உள்ளார்கள்.

Newsletter

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....

பொள்ளாச்சி எம்.பி. மேம்பாடு நிதியில் ரூ.57 லட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக் கடைகள், அங்கன்வாடி மையம் திறப்பு

கோவை மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.5...

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...