தேசிய அளவிலான தடகளப் போட்டியில் வென்ற கோவையை சேர்ந்த தலைமை காவலருக்கு எஸ்.பி வாழ்த்து..!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றும் கோவிந்தராஜ் என்பவர், மராட்டிய மாநிலம் நாசிக்கில் நடைபெற்ற தடகள போட்டியில், 100, 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இரண்டு வெள்ளி பதக்கமும் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப் பதக்கமும் வென்றார்.



கோவை: கடந்த மாதம் (நவம்பர்) 25-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை மராட்டிய மாநிலம் நாசிக்கில் 40 வயதுக்கு மேற்பட்டோருக்கான தேசிய அளவிலான தடகள போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியில், பங்கேற்ற கோவை மாவட்டம் கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றும் கோவிந்தராஜ் என்பவர், 100, 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இரண்டு வெள்ளி பதக்கமும் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப் பதக்கமும் வென்றார்.



இந்த நிலையில், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், தலைமை காவலர் கோவிந்தராஜை அவரது அலுவலகத்திற்கு நேரில் அழைத்து பாராட்டினார்.



காவல் துறையினரின் திறமைகளை ஊக்குவிக்கும் வகையில், விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற காவலரை எஸ்பி நேரில் அழைத்து வாழ்த்தியுள்ளது மேலும் ஊக்கமளிப்பதாக காவலர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...