தேசிய அளவிலான தடகளப் போட்டியில் வென்ற கோவையை சேர்ந்த தலைமை காவலருக்கு எஸ்.பி வாழ்த்து..!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றும் கோவிந்தராஜ் என்பவர், மராட்டிய மாநிலம் நாசிக்கில் நடைபெற்ற தடகள போட்டியில், 100, 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இரண்டு வெள்ளி பதக்கமும் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப் பதக்கமும் வென்றார்.



கோவை: கடந்த மாதம் (நவம்பர்) 25-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை மராட்டிய மாநிலம் நாசிக்கில் 40 வயதுக்கு மேற்பட்டோருக்கான தேசிய அளவிலான தடகள போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியில், பங்கேற்ற கோவை மாவட்டம் கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றும் கோவிந்தராஜ் என்பவர், 100, 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இரண்டு வெள்ளி பதக்கமும் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப் பதக்கமும் வென்றார்.



இந்த நிலையில், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், தலைமை காவலர் கோவிந்தராஜை அவரது அலுவலகத்திற்கு நேரில் அழைத்து பாராட்டினார்.



காவல் துறையினரின் திறமைகளை ஊக்குவிக்கும் வகையில், விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற காவலரை எஸ்பி நேரில் அழைத்து வாழ்த்தியுள்ளது மேலும் ஊக்கமளிப்பதாக காவலர்கள் தெரிவித்தனர்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...