கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் சாதி ஒழிப்பு மாவீரர்கள் நாள் கருத்தரங்கம்

கோவை ரயில் நிலையம் பகுதியில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் சாதி ஒழிப்பு போராட்டத்தில் மரணம் அடைந்தவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.


கோவை: கடந்த 1957ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதிசாதி ஒழிப்பிற்காக மாபெரும் போராட்டம் நாடு முழுவதும் நடைபெற்றது. அன்றைய தினம் நடந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய சட்ட பிரிவுகள் சிலவை சாதியை பாதுகாப்பது போல் உள்ளதாக கூறி அதனை எரித்து போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. அந்தப் போராட்டத்தில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களில் பலர் சிறையிலேயே உயிரிழந்தனர்.

இந்த நிகழ்வை தொடர்ந்து ஆண்டுதோறும் அந்த போராட்டத்தில் மரணம் அடைந்தவர்களுக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்றைய தினமும் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.



கோவை ரயில் நிலையம் பகுதியில் உள்ள தனியார் அரங்கில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் அதன் பொதுச்செயலாளர் ராமகிருட்டிணன் தலைமையில்கருத்தரங்கு நடைபெற்றது. இதில் பேராசிரியர் சாரோன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். மேலும் இந்நிகழ்வில் தந்தை பெரியார் திராவிடக் கழக மாநில அமைப்பு செயலாளர் ஆறுசாமி, வெளியீட்டு செயலாளர் மனோகரன், பெரியார் மற்றும் அம்பேத்கர் உணர்வாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....

பொள்ளாச்சி எம்.பி. மேம்பாடு நிதியில் ரூ.57 லட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக் கடைகள், அங்கன்வாடி மையம் திறப்பு

கோவை மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.5...