மேட்டுப்பாளையம் குடிநீர் வழங்கக் கோரி மேல்முடுதுறை மக்கள் ஆட்சியரிடம் மனு


குடிநீர் இன்றி மிகுந்த சிரமப்படுவதாகவும், உடனடியாக மேட்டுப்பாளையம் குடிநீர் வழங்கக் கோரியும் மேல்முடுதுறை மக்கள் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



இதுகுறித்து அம்மனுவில் கூறியுள்ளதாவது:-

மேல்முடுதுறை பகுதியில் சுமார் 15 குடும்பங்கள் கடந்த 10 வருடத்திற்கும் மேல் வசித்து வருகிறோம். எங்களுக்கு பஞ்சாயத்து துறையின் மூலம் நிலத்தடி நீர் அமைத்து தண்ணீர் வசதி செய்து தரப்பட்டுள்ளது. ஆனால், அந்த நிலத்தடி ஆழ்குழாய் கிணற்றில் இருந்து தண்ணீர் முழுமையாக தடைபட்ட காரணத்தாலும், மோட்டார் பழுதடைத்துள்ளதாலும் கடந்த 5 மாதங்களாக தண்ணீருக்கு மிகுந்த சிரமப்பட்டுக்கொண்டிருக்கிறோம்.

தண்ணீருக்காக பக்கத்து ஊர்களான கவுண்டம்பாளையம், காரணூர், கனுவக்கறை போன்ற ஊர்களுக்கு சென்று தண்ணீர் கொண்டு வருகிறோம். 

இப்பிரச்சனை குறித்து முடுதுறை செயல்அலுவலர், காரமடை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர், செயற்பொறியாளர், மேட்டுப்பாளையம் குடிநீர் வடிகால்வாரியம் உள்ளிட்ட அலுவலகங்களுக்கு மனு அளித்தும் பயனில்லை.

மேலும், எங்கள் ஊரிலேயே 1 லட்சத்து 20 ஆயிரம் லிட்டர் கொள்ளளவுள்ள தரைமட்ட ஆற்று நீர் தேக்கத்தொட்டியும் நீர் ஊற்று நிலையமும் அமைத்து பக்கத்து ஊர்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இவ்வளவு பெரிய நீர்தேக்கத் தொட்டி இருந்தும் எங்கள் பகுதிக்கு தண்ணீர் கிடைப்பதில்லை. 

எனவே, மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு எங்கள் பகுதி மக்கள் பயனடையும் வகையில் குடிநீருக்கு ஏற்பாடு செய்து தர வேண்டும்" என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....

பொள்ளாச்சி எம்.பி. மேம்பாடு நிதியில் ரூ.57 லட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக் கடைகள், அங்கன்வாடி மையம் திறப்பு

கோவை மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.5...