தேசிய மாணவர் படை ஏ சான்றிதழ் தேர்வில் ஆர்வமுடன் பங்கேற்ற மாணவ, மாணவியர்கள்


கோவை மாவட்டம், பீளமேடு பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் தேசிய மாணவர் படைக்கான ஏ சான்றிதழ் தேர்வு நடைபெற்றது. 



இத்தேர்விற்கு, தமிழ்நாடு 4 பெட்டாலியன் தேசிய மாணவர் படை நிர்வாக அதிகாரி லெப்டினன்ட் கர்ணல் செந்தில் குமார் தலைமை வகித்தார்.



இதில், கோவை, திருப்பூர், பல்லடம், உடுமலை மற்றும் தாராபுரம் பகுதியை சேர்ந்த இரண்டாம் ஆண்டு தேசிய மாணவர் படை பயிற்சி முடித்த பள்ளி மாணவ, மாணவியர்கள் சுமார் 400 பேர் மிகுந்த உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.



இத்தேர்வின் போது அணி நடை பயிற்சி, துப்பாக்கி கையாளுதல் பயிற்சி உட்பட பல பாடங்களில் இருந்து எழுத்து மற்றும் செய்முறை தேர்வு நடைபெற்றது. இதனை 4 தமிழ்நாடு பெட்டாலியன் தேசிய மாணவர் படை ராணுவ பயிற்சியாளர்கள் மற்றும் பள்ளி என்சிசி அதிகாரிகள் மேற்பார்வை செய்தனர்.

Newsletter

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....

பொள்ளாச்சி எம்.பி. மேம்பாடு நிதியில் ரூ.57 லட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக் கடைகள், அங்கன்வாடி மையம் திறப்பு

கோவை மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.5...

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...