கோவையில் கனமழை - மழைநீர் வடிகால், கால்வாய் தூய்மை பணியால் தரைப்பாலங்களில் நீர் தேங்குவது தவிர்ப்பு

கோவையில் இரவு முழுவதும் கனமழை வெளுத்து வாங்கிய நிலையில் மழைநீர் வடிகால் மற்றும் கால்வாய்களில் மாநகராட்சியின் தூய்மை பணி காரணமாக லங்கா கார்னர் உள்ளிட்ட முக்கிய தரைப்பாலங்களில் நீர் தேங்காமல் வெளியேறியது. He ruled.


கோவை: வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததன் காரணமாக தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது.

குறிப்பாக கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வரும் நிலையில், நேற்று இரவு முழுவதும் தொடர் கன மழை வெளுத்து வாங்கியது. இதனால் கோவை மாநகரில் முக்கிய பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

இதனிடையே வடகிழக்கு பருவமழையை எதிர்நோக்கி கோவை மாநகராட்சி நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் வடிகால், கால்வாய்களில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன் காரணமாக பெரும்பாலான இடங்களில் நீர் தேங்காமல் வெளியேறியது.

குறிப்பாக கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து மழை பெய்யும் போது கோவை லங்கா கார்னர், அவிநாசி மேம்பாலம் மற்றும் கிக்கானிக் தரைப்பாலம் முழுமையாக நீர் தேங்கி அந்த சாலைகளில் போக்குவரத்து முடங்கும் சூழல் ஏற்படும். பின்னர் ராட்சத மோட்டர்கள் மூலம் நீண்ட நேரம் நீர் வெளியேற்றப்பட்டு சாலைகள் மீண்டும் திறந்து விடப்படும்.



ஆனால் அந்த கால்வாய்கள், மழை நீர் வடிகால் தூய்மை செய்யப்பட்ட நிலையில் இரவு முழுவதும் தொடர்ந்து மழை பெய்த நிலையிலும் இந்த தரைப்பாலங்களில் நீர் தேங்காமல் வெளியேறியது.



இதனால் எந்த பாதிப்பும் இன்றி அந்த சாலையில் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது.

போர்க்கால அடிப்படையில் மாநகராட்சி ஊழியர்கள் பல்வேறு பகுதிகளில் ரோந்து சென்று தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...