திருப்பூர் பூங்கா சாலையில் விபத்தானவருக்கு சிகிச்சை அளிக்க மறுப்பு தெரிவித்த 108 ஆம்புலன்ஸால் பரபரப்பு

திருப்பூர் பூங்கா சாலையில் விபத்தில் படுகாயமடைந்த நபரை முதலுதவி சிகிச்சைக்கு அந்த வழியாக சென்ற 108 ஆம்புலன்ஸ் ஏற்க மறுத்ததால் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர்: திருப்பூர் பூங்கா சாலை வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து படுகாயமடைந்தார்.



அப்போது அந்த வழியாக வந்த 108 வாகனத்தை நிறுத்திய பொதுமக்கள் காயமடைந்த நபருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வலியுறுத்தினர்.



ஆனால் பழுது பார்க்கும் பணிக்காக செல்வதாக கூறி ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அங்கிருந்து வாகனத்தை எடுத்து புறப்பட்டனர்.

பின்னர் அவர்களை வழிமறித்த பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.



இதனால் அந்த 108 ஆம்புலன்ஸ் மீண்டும் திரும்பி வந்து காயமடைந்த நபரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றது.

108 ஆம்புலன்ஸ் முதலுதவிக்கு நபரை ஏற்க மறுத்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நீடித்தது.

Newsletter

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...