திருப்பூர் பூங்கா சாலையில் விபத்தானவருக்கு சிகிச்சை அளிக்க மறுப்பு தெரிவித்த 108 ஆம்புலன்ஸால் பரபரப்பு

திருப்பூர் பூங்கா சாலையில் விபத்தில் படுகாயமடைந்த நபரை முதலுதவி சிகிச்சைக்கு அந்த வழியாக சென்ற 108 ஆம்புலன்ஸ் ஏற்க மறுத்ததால் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர்: திருப்பூர் பூங்கா சாலை வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து படுகாயமடைந்தார்.



அப்போது அந்த வழியாக வந்த 108 வாகனத்தை நிறுத்திய பொதுமக்கள் காயமடைந்த நபருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வலியுறுத்தினர்.



ஆனால் பழுது பார்க்கும் பணிக்காக செல்வதாக கூறி ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அங்கிருந்து வாகனத்தை எடுத்து புறப்பட்டனர்.

பின்னர் அவர்களை வழிமறித்த பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.



இதனால் அந்த 108 ஆம்புலன்ஸ் மீண்டும் திரும்பி வந்து காயமடைந்த நபரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றது.

108 ஆம்புலன்ஸ் முதலுதவிக்கு நபரை ஏற்க மறுத்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நீடித்தது.

Newsletter

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...