கோவை வால்பாறை அருகே மாரியம்மன் கோவிலை இடித்து சேதப்படுத்திய காட்டு யானைகள் - அச்சத்தில் மக்கள்..!

வால்பாறை அடுத்த அக்காமலை எஸ்டேட்டில் உள்ள மாரியம்மன் கோவில் ஜன்னல் மற்றும் கதவுகளை உடைத்து உள்ளே சென்று, பொருட்களை சேதப்படுத்திய சம்பவம் பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் கடந்த சில நாட்களாக காட்டு யானைகளின் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் வால்பாறை அருகேயுள்ள அக்காமலை எஸ்டேட்டுக்கு உட்பட்ட 21.பாடி பகுதியில் நேற்றிரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 3 காட்டு யானைகள் சுற்றித் திரிந்துள்ளன.



இதனிடையே அங்குள்ள மாரியம்மன் கோவிலில் இருந்த இரும்பு கேட், ஜன்னல் கதவு போன்றவற்றை உடைத்துள்ளன.



மேலும் உள்ளே சென்ற யானைகள் அங்கிருந்த பொருட்களையும் உடைத்து சேதப்படுத்தி உள்ளன. இதனை கண்ட அப்பகுதி மக்கள் கூச்சலிட்டு யானைகளை நீண்ட நேர போராட்டத்திற்கு பின்பு விரட்டினர்.

இந்நிலையில், காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதால், யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் வராமல் தடுக்க வனத்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...