கோவை வால்பாறை அருகே மாரியம்மன் கோவிலை இடித்து சேதப்படுத்திய காட்டு யானைகள் - அச்சத்தில் மக்கள்..!

வால்பாறை அடுத்த அக்காமலை எஸ்டேட்டில் உள்ள மாரியம்மன் கோவில் ஜன்னல் மற்றும் கதவுகளை உடைத்து உள்ளே சென்று, பொருட்களை சேதப்படுத்திய சம்பவம் பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் கடந்த சில நாட்களாக காட்டு யானைகளின் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் வால்பாறை அருகேயுள்ள அக்காமலை எஸ்டேட்டுக்கு உட்பட்ட 21.பாடி பகுதியில் நேற்றிரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 3 காட்டு யானைகள் சுற்றித் திரிந்துள்ளன.



இதனிடையே அங்குள்ள மாரியம்மன் கோவிலில் இருந்த இரும்பு கேட், ஜன்னல் கதவு போன்றவற்றை உடைத்துள்ளன.



மேலும் உள்ளே சென்ற யானைகள் அங்கிருந்த பொருட்களையும் உடைத்து சேதப்படுத்தி உள்ளன. இதனை கண்ட அப்பகுதி மக்கள் கூச்சலிட்டு யானைகளை நீண்ட நேர போராட்டத்திற்கு பின்பு விரட்டினர்.

இந்நிலையில், காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதால், யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் வராமல் தடுக்க வனத்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...