மேட்டுப்பாளையம் குற்றவியல் நடுவர்மன்ற நீதிபதி நூதன நிபந்தனைகளுடன் மாணவர்களுக்கு ஜாமீன் வழங்கினார்.

கோவை மாவட்டம் காரமடையில் தகராறு செய்ததாக கைது செய்யப்பட்ட மாணவர்களுக்கு தினமும் 10 குறள்கள் வீதம் 10 நாட்களுக்கு 100 குறள்கள் படிக்க வேண்டும் என்ற நூதன நிபந்தனைகளுடன் நீதிபதி சுரேஷ்குமார் ஜாமீன் வழங்கினார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே கடந்த 31ம் தேதி சாலையோரத்தில் சவுண்டமுத்து என்பவரிடம் குடிபோதையில் தகராறில் ஈடுபட்டதாக தனியார்கல்லூரி மாணவர்கள் (ஹரி, மணிகண்டன், முத்து) ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் கைதான மாணவர்கள் சார்பில் மேட்டுப்பாளையம்நடுவர் நீதிமன்றத்தில் இன்று ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த மனுவினை விசாரித்த மேட்டுப்பாளையம் குற்றவியல் நடுவர்மன்ற நீதிபதி சுரேஷ்குமார், மாணவர்கள் மூன்று பேருக்கும் நூதன நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கினார். தனியார் கல்லூர் மாணவர்கள் மூவரும் தினமும் 10 குறள்கள் வீதம் 100 குறள்களை அதற்குரிய விளக்கத்துடன் மனப்பாடம் செய்து, மேட்டுப்பாளையம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தமிழ் ஆசிரியரிடம் ஒப்புவிக்க வேண்டும் எனவும் இதை பள்ளியின் தலைமை ஆசிரியர் உறுதி செய்து நீதிமன்றத்தில் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்க வேண்டும் எனவும்மேட்டுப்பாளையம் குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி சுரேஷ் குமார் தனது உத்திரவில்  தெரிவித்துள்ளார்.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....

பொள்ளாச்சி எம்.பி. மேம்பாடு நிதியில் ரூ.57 லட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக் கடைகள், அங்கன்வாடி மையம் திறப்பு

கோவை மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.5...