கோவையில் இளம்பெண்ணுக்கு 108 ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே பிரசவம் - அழகான பெண் குழந்தை பிறந்தது

நம்.4 வீரபாண்டி அருகே மணிமேகலை என்ற பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்ட நிலையில் ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றிச் சென்ற போது, அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.



கோவை மாவட்டம் வீரபாண்டி பகுதியை சேர்ந்தவர் சிலம்பரசன். இவரது மனைவி மணிமேகலை (26). நிறைமாத கர்ப்பினியான மணிமேகலைக்கு இன்று காலை திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அவர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனடியாக அங்கு வந்த காரமடை ஆம்புலன்சில் மணிமேகலையை அழைத்துச் சென்றனர். ஆனால் அவருக்கு குழந்தை வெளியே வர துவங்கியதால், ஆம்புலன்சில் இருந்த மருத்துவரே பிரசவம் பார்த்துள்ளார்.

மருத்துவர் பிரசவம் பார்ப்பதற்கு, உறவினர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சங்கிலி முருகன் உள்ளிட்டோர் உதவி செய்தனர். இதில் மணிமேகலைக்கு ஆம்புலன்சிலேயே அழகான பெண் குழந்தை பிறந்தது.

இதையடுத்து இருவரும் வீரபாண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டனர். அங்கு இருவருக்கும் மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இருவரையும் பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள் தாய் - சேய் இருவரும் நலமுடன் இருப்பதாக தெரிவித்து உள்ளனர்.

Newsletter

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...