கோவையில் தீபாவளி வரை இரவு 1.00 மணி வரை வணிக நிறுவனம் இயங்க அனுமதி; சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டும் - மாநகர காவல்துறை

தீபாவளி பண்டிகையின் கூட்ட நெரிசலை தவிர்க்க மற்றும் பொதுமக்களின் வசதிக்காக, தீபாவளி வரை இரவு 1 மணி வரை கடைகள் திறந்திருக்க காவல்துறையினர் அனுமதி அளித்துள்ளனர்.


கோவை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவை மாநகரில் உள்ள பல்வேறு ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள் மற்றும் இதர வியாபார கடைகளில் அதிகளவில் கூட்டம் காணப்படுகிறது.

கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்கும், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் பணிபுரிவோரும் தங்கள் அன்றாட பணி பாதிக்காத வகையில் அலுவல் நேரம் முடிந்த பிறகு, இரவில் கடைவீதிகளுக்கு சென்று தீபாவளி பண்டிகைக்கு தேவையான பொருட்களை வாங்கிச் செல்வதற்கு வசதியாக கடைகள் இயங்கும் நேரத்தை அதிகரிப்பது குறித்து கோவை மாநகரில் உள்ள அனைத்து வியாபாரிகள் சங்கம் மற்றும் கோவை மாநகர ஜவுளி வியாபாரிகள் சங்கம் ஆகியவற்றின் நிர்வாகிகளுடன், கோவை மாநகர காவல்துறை சார்பில் ஆலோசனைக்கூட்டம் நடத்தப்பட்டது.

மேற்படி, ஆலோசனைக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, கோவை மாநகரில் தீபாவளி பண்டிகை வரை அனைத்து வியாபாரத்தளங்களும் இரவு 1.00 மணி வரை செயல்படலாம் என்றும் இரவில் கடைகளுக்கு பொருட்கள் வாங்க பொதுமக்கள் செல்ல ஏதுவாக கூடுதல் அரசு பேருந்துகளும் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடைகள் மற்றும் நிறுவனங்கள் ஆகியவற்றின் வியாபார வசதியாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பாக சிறப்பு பேருந்துகள் கோவை மாநகரின் அனைத்து பகுதிகளுக்கு இயக்கப்படும் என்று ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

நேற்று இரவு கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் கடைவீதி பகுதிகளில் கண்காணிப்பு பணிகள் மற்றும் கூட்ட நெரிசலை நேரில் ஆய்வு செய்தார். இப்போது, தீபாவளி பண்டிகையை மக்கள் பாதுகாப்பாக கொண்டாட காவல்துறை சார்பில் 750 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், கூடுதல் போக்குவரத்து மற்றும் இரவு நேரத்தில் கூடுதல் நேரம் கடைகள் செயல்பட வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...