பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் கேரள அரசை கண்டித்து கோவையில் உள்ள கேரளா சமாஜ அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கைது.


பவானி ஆற்றின் குறுக்கே தேக்குவட்டை,மஞ்சகண்டி உள்ளிட்ட 6 இடங்களில் கேரள அரசு தடுப்பனை கட்டி வருகிறது.பவானி ஆற்றின் குறுக்கே அனைகட்டி தண்ணீர் தேக்குவதால் கோவை,திருப்பூர்,ஈரோடு,கரூர் மாவட்டங்களில் தண்ணீர் பற்றாகுறை ஏற்படும் என்பதால கேரள அரசு இதனை கைவிட வேண்டும் என கோரி தடுப்பனை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் உள்ள கட்சிகள் ஆர்பாட்டம் செய்து வருகின்றனர்.

கடந்த 29ம் தேதி த.பெ.தி.க, காங்கரஸ், தி.மு.க, விடுதலை சிறுத்தைகள் மற்றும் விவசாய சங்கங்கள் உள்ளிட்ட ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டு ஆனைகட்டி அருகே முற்றுகையிட முயன்றவர்களை போலீஸார் கைது செய்தனர்.

இன்று கோவை நூறடி சாலையில் உள்ள கேரளா சமாஜ அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர், மற்றும் விடுதலை சிறுத்தைகள் அமைப்பை சேர்ந்த 20கும் மேற்பட்டோரை போலீசார் தடுத்து நிறுத்தினர்.இதனை தொடர்ந்து போராட்டத்தில்  ஈடுபட்டவர்கள் 100 அடி சாலையில் படுத்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து ஏற்பட்டதை  தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்களை போலிஸார் குண்டுகட்டாக தூக்கி சென்று கைது செய்தனர்.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....

பொள்ளாச்சி எம்.பி. மேம்பாடு நிதியில் ரூ.57 லட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக் கடைகள், அங்கன்வாடி மையம் திறப்பு

கோவை மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.5...