மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை தொழில் துறையினரின் எதிர்பார்ப்புகளை ஓரளவு பூர்த்தி செய்திருப்பதாக தொழில் துறையினர் கருத்து


மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை தொழில் துறையினரின் எதிர்பார்ப்புகளை முழுமையாக நிவர்த்தி செய்யவில்லை எனினும், ஒரளவு பூர்த்தி செய்திருப்பதாக தொழில் துறையினர் கருத்து தெரிவித்துள்ளனர்.



2017- 18 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய இந்திய தொழில் வர்த்தக சபையின் முன்னாள் தலைவர் பாலசுந்தரம், பணமதிப்பிழப்பு நடவடிக்கையினால் தொழில் முடக்கம் ஏற்பட்டு இருந்த நிலையில், தொழில் துறையினர் இந்த நிதிநிலை அறிக்கையை ஆவலுடன் எதிர்பார்த்து இருந்ததாக தெரிவித்தார். 

நிதிநிலை அறிக்கை தொழில் துறையினரின் எதிர்பார்ப்புகளை முழுமையாக நிவர்த்தி செய்யவில்லை எனினும், ஓரளவு பூர்த்தி செய்திருப்பதாக அவர் தெரிவித்தார். 

5 இலட்ச ரூபாய்க்கு கீழ் வருமானம் பெறும் தனிநபருக்கு வருமான வரியினை பாதியாக குறைத்து இருப்பதற்கும், சிறு, குறுந்தொழில் முனைவோருக்கு வருமான வரியினை 25 சதவீதமாக குறைத்து இருப்பதற்கும், மறைமுக வரியில் எந்த மாற்றமும் செய்யப்படாதது உள்ளிட்டவற்றிக்கு அவர் வரவேற்பு தெரிவித்தார். 

மேலும் அனைத்து துறைகளுக்கும் அதிக நிதி ஒதுக்கீடு செய்திருப்பது தொழில் மற்றும் பொருளாதாரம் வளர்ச்சி அடைய உதவுமெனவும் கூறிய அவர், மின்னணு பொருளாதாரத்தை ஊக்குவிக்க அறிவிப்புகள் இல்லாதது ஏமாற்றம் அளிப்பதாக தெரிவித்தார். 

மேலும் தமிழகத்திற்கென இந்த பட்ஜெட்டில் இரயில்வே தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்பது வருத்தமளிப்பதாகவும் அவர் அப்போது தெரிவித்தார்.

இதேபோல செய்தியாளர்களிடம் பேசிய தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத்தின் தலைவர் செந்தில்குமார், இந்த நிதிநிலை அறிக்கையில் ஜவுளித்துறைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். 

மேலும் இந்த நிதி நிலை அறிக்கை நாட்டை வளர்ச்சி பாதைக்கு அழைத்து செல்லும் எனவும், நீண்ட கால அடிப்படையில் தொழில் துறையினருக்கு பயனளிக்கும் எனவும் அவர் தெரிவித்தார். 

கட்டமைப்பு வசதிகள், திறன் மேம்பாடு உள்ளிட்டவற்றிக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாகவும் ஊரக பகுதிகளில் 1 கோடி வீடுகள் கட்டும் திட்டம் பஞ்சாலை தொழிலாளர்களுக்கு பயனளிக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....

பொள்ளாச்சி எம்.பி. மேம்பாடு நிதியில் ரூ.57 லட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக் கடைகள், அங்கன்வாடி மையம் திறப்பு

கோவை மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.5...