கொங்குநாட்டு உணவுகளை சமைத்து அசத்திய கோவை சங்கரா கல்லூரி மாணவர்கள்


கோவை விழாவின் ஒரு பகுதியாக கோவை சங்கரா கல்லூரியில் இன்று கொங்குநாட்டு சமையல் என்ற தலைப்பின் கீழ் மாணவர்களுக்கான சமையல் போட்டி நடைபெற்றது.



சங்கரா கல்லூரியின் சமையல் கலை மற்றும விடுதி மேலாண்மை துறை ஒருங்கிணைத்து நடத்திய இப்போட்டியினை துணை இணைச் செயலாளர் நித்யா ராமச்சந்திரன் துவக்கி வைத்தார்.



இதில் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு கொங்கு நாட்டின் உணவு வகைகளை சமைப்பதில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

இப்போட்டியின் போது மாணவர்கள், கடலை லட்டு, கம்பு அல்வா, தங்கப்பால் அல்வா, இளநீர் பாயாசம், பேரிச்சை லட்டு, சிவப்பு அரிசி அல்வா, ராகி சாக்லேட் லட்டு உள்ளிட்ட பல உணவுகளை செய்து அசத்தினர்.



இதைத்தொடர்ந்து, அக்கல்லூரியின் துணை முதல்வர் டாக்டர் பெர்னார்ட் எட்வர்டு, சமையல் கலை மற்றும் விடுதி மேலாண்மை துறை சமையல் கலை நிபுணர் ஆனந்தராஜ் ஆகிய இருவரும் மாணவர்களால் சமைக்கப்பட்ட உணவுகளை சுவைத்துப்பார்த்து பரிசுப் பொருட்களை வழங்கினர்.



இதில், முதல் பரிசை தருன் என்னும் மாணவர் பெற்றார். இரண்டாம் பரிசை வித்யா மோள் என்பவரும், ராஜேஷ்வரன் என்னும் மாணவர் மூன்றாம் பரிசும் பெற்றனர்.

வெற்றிபெற்ற மாணவர்களுக்கு கோவை விழா குழுவினர் பரிசுகளை வழங்கி பாராட்டுத்தெரிவித்தனர்.

நிரைவாக துணை முதல்வர் பெர்னார்ட் எட்வர்டு அனைவருக்கும் நன்றியுரை வழங்கினார்.

Newsletter

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....

பொள்ளாச்சி எம்.பி. மேம்பாடு நிதியில் ரூ.57 லட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக் கடைகள், அங்கன்வாடி மையம் திறப்பு

கோவை மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.5...

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...