குஜராத்தில் ரூ.2.5 லட்சம் லஞ்ச தொகை ரூ.2 ஆயிரம் தாள்களாக பிடிபட்டதால் பரபரப்பு, இருவர் கைது

பழைய ரூ.500,1000 தாள்கள் செல்லாது என்ற பிரதமர் மோடியின் அறிவிப்பையடுத்து நாடு முழுவதும் ரூபாய் தாள்களை மாற்ற மக்கள் கடும் சிரமப்பட்டு வரும் நிலையில், குஜராத்தில் உள்ள இரண்டு துறைமுக அதிகாரிகள் ரூ.2.5 லட்சம் லஞ்சம் பெற்றதாக கைது செய்யப்பட்டனர். ஆனால், இதில் விநோதம் என்னவெனில் லஞ்சப்பணம் அனைத்தும் புதிய ரூ 2 ஆயிரம் தாள்கள் என்பது கவனிக்கத்தக்கது.

நவம்பர் 11 ஆம் தேதி முதல் புதிய ரூ.2 ஆயிரம் தாள்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த தாள்கள் இன்னும் புழக்கத்தில் போதிய அளவில் வாராததால் மக்கள் கடும் சிரமப்பட்டு வரும் நிலையில், லஞ்சப்பணமாக இவ்வளவு தொகையில் புதிய ரூ 2 ஆயிரம் தாள்கள் கிடைத்தது சோதனையிடச்சென்ற அதிகாரிகளை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

குஜராத்தில் உள்ள கண்டாலா துறைமுகத்தில் அதிகாரிகளாக பணியாற்றி வரும் பி ஸ்ரீவிவாசு மற்றும் கே கோமேட்கர் ஆகியோர் லஞ்சம் பெற்றதாக கைதுக்குள்ளான அதிகாரிகள் ஆவர்.  இவர்கள் 4.4 லட்சம் தொகைக்கான நிலுவை பில் தொகையை மாற்றுவதற்காக தனியார் மின்னனு நிறுவனத்திடம் இருந்து லஞ்சம் பெற்றுள்ளனர். இதையடுத்து குஜராத் ஊழல் தடுப்பு பிரிவால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். ஸ்ரீனிவாசுவின் வீட்டில் இருந்து மேலும் ரூ. 40 ஆயிரம் தொகையை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். புதிய ரூபாய் தாள்கள் லஞ்சப்பணமாக கிடைத்தது எப்படி என்பது பற்றி ஊழல் தடுப்பு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...