நாசிக் அச்சகத்தில் இருந்து 50 லட்சம் புதிய ரூ.500 நோட்டுகள்

மகாராஷ்டிரா மாநிலம், நாசிக் அச்சகத்தில் 50 லட்சம் புதிய ரூ.500 நோட்டுக்கள் அச்சிடப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

ரூ.500, 1,000 நோட்டுக்களை வாபஸ் பெறுவதாக மத்திய அரசு நவ., 8 ம் தேதி அறிவித்ததை அடுத்து, நாடு முழுவதும் அன்றாட செலவுகளுக்கான பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஏடிஎம்.,களில் பணம் எடுக்க முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். மக்களின் இந்த சிரமத்தை குறைக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ரிசர்வ் வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், ‛மகாராஷ்டிரா மாநிலம், நாசிக்கில் உள்ள கரன்சி நோட்டு அச்சகத்தில் இருந்து 50 லட்சம் புதிய ரூ.500 நோட்டுக்கள் அச்சடித்து, வங்கிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் 50 லட்சம் நோட்டுக்கள் நவ., 16ம் தேதி விநியோகத்திற்கு அனுப்பப்பட உள்ளன' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நாட்டில் உள்ள ரூபாய் நோட்டு அச்சடிக்கும் ஒன்பது அச்சகங்களில் நாசிக் அச்சகமும் ஒன்று. இங்கு ரூ.20, 50, 100 நோட்டுக்களும் அதிக அளவில் அச்சிடப்பட்டு வருகிறது. அரசு புதிதாக அறிமுகப்படுத்திய ரூ.2,000 நோட்டுக்கள் மட்டுமே இதுவரை புழக்கத்திற்கு வந்துள்ளன. புதிய ரூ.500 நோட்டுக்களும் தங்குதடையின்றி கிடைப்பதற்காக அதிக அளவில் அச்சிடப்பட்டு வருவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...