கேரளாவில் பள்ளிகளுக்கு வை–பை வசதி அமைக்க திட்டம்

கேரள மாநிலத்தில் ஆரம்ப பள்ளிகளில் வை-பை வசதி அமைக்கும் திட்டத்தை அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

கேரள மாநிலத்தில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரிகள் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. இந்த ஆட்சியில் கல்வியை மேம்படுத்த புதிய திட்டங்களை செயல்படுத்த அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, பள்ளிகளில் முதல்கட்ட நடவடிக்கை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. இதில் 10 ஆயிரம் ஆரம்ப பள்ளிகளில் வை-பை வசதி, இண்டர்நெட் வசதியை ஏற்படுத்தி தர முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, பி.எஸ்.என்.எல். நிறுவனம், கேரளாவில் உள்ள 10 ஆயிரம் ஆரம்ப பள்ளி மற்றும் நடுநிலை பள்ளிகளில் வை-பை வசதியை வரும் 1ம் தேதி முதல் துவங்க உள்ளது. இதனைத் தவிர 5 ஆயிரம் உயர்நிலை பள்ளிகளுக்கு பிராண்ட்பேண்ட் வசதி அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், 8 முதல் 12ம் வகுப்பு வரையிலான வகுப்பறைகள் டிஜிட்டல் மயமாக்கப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...