ஓடும் ரயிலில் தமிழ் நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது

ஓடும் ரயிலில் தமிழ் நடிகை சனுஷாவுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆண்டோ போஸ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஓடும் ரயிலில் தமிழ் நடிகை சனுஷாவுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆண்டோ போஸ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

நடிகை சனுஷா கேரளத்தின் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள நீலேஸ்வரத்தில் பிறந்தவர். வினயன் இயக்கிய நாளை நமதே என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்தார். பின்னர், திலீப் நாயகனாக நடித்த மிஸ்டர் மருமகன் என்ற மலையாளத் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார். à®®à¯‡à®²à¯à®®à¯, ரேணிகுண்டா, பீமா, அலெக்ஸ் பாண்டியன் உள்ளிட்ட பல்வேறு தமிழ் படங்களில் நடித்துள்ளார். 

இந்நிலையில், இவர் விரைவு ரயிலில் கன்னூரில் இருந்து திருவனந்தபுரம் சென்று கொண்டிருந்தபோது ஆண்டோ போஸ் என்பவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாகத் தெரிகிறது. இதைதொடர்ந்து, சனுஷா டிக்கெட் பரிசோதகரிடம் புகார் அளித்துள்ளார். இதையடுத்து அவர், போலீசாரிடம் தகவல் தெரிவித்தார். தகவலறிந்து வந்த போலீசார் பாலியல் தொந்தரவு கொடுத்த நபரை அதிரடியாக கைது செய்தனர். அந்த நபர் தமிழ்நாட்டை சேர்ந்தவர் எனக் கூறப்படுகிறது.

ஆபாசமாகப் பேசியதாக நடிகை அமலாபால் அளித்த புகாரின் அடிப்படையில் தொழிலதிபர் அழகேசன் என்பவர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், மேலும் ஒரு நடிகைக்கு ஓடும் ரயில் பாலியல் தொல்லை அளித்துள்ள சம்பவம் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...