”நாளை நமதே” அரசியல் சுற்றுப்பயணம் குறித்து கவிதை வெளியிட்ட நடிகர் கமல்

’நாளை நமதே’ என்ற பெயரில் தனது அரசியல் சுற்றுப்பயணத்தை தொடங்கவிருக்கும் நடிகர் கமலஹாசன், டுவிட்டரில் கவிதை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

ஜனவரி 26

’நாளை நமதே’ என்ற பெயரில் தனது அரசியல் சுற்றுப்பயணத்தை தொடங்கவிருக்கும் நடிகர் கமலஹாசன், டுவிட்டரில் கவிதை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். 

நடிகர் கமலஹாசன் தனது சுற்றுப்பயணத்துக்கு ‘நாளை நமதே’ என்று பெயர் சூட்டியுள்ளார். இதுகுறித்து அவர் ஒரு கவிதையை தனது குரலில் ஆடியோவாக வெளியிட்டுள்ளார். அதில் கூறி இருப்பதாவது:- 

நாளை நமதே....

நேற்றையும் இன்றையும் ஆய்ந்து அறிந்தால்

நாளை நமதே....

பார்த்ததை பயின்றதை பழகி நடந்தால்

நாளை நமதே....

நிலவும் நீரும் பொதுவென புரிந்தால்

நாளை நமதே....

எனக்கே எனக்கென முந்தா திருந்தால்

நாளை நமதே...

மூத்தோர் கடமையை இளையோர் செய்தால்

நாளை நமதே...

அனைவரும் கூடி தேரை இழுத்தால்

நாளை நமதே....

சலியா மனதுடன் உழைத்து வாழ்ந்தால்

நாளை நமதே...

முனைபவர் கூட்டம் பெருகியும்விட்டால்

நாளை என்பது நமதே நமதே....

கிராமியமே நம் தேசியம் என்றால்

நாளை நமதே... வெற்றியும் நமதே...

தமிழர் தமிழால் இணைக்கப்பட்டால்

நாளை நமதே... நிச்சயம் நமதே....

நாளை நமதே.... நாளை நமதே...

இவ்வாறு கமலஹாசன்  கூறியுள்ளார்.

எம்.ஜி.ஆர். நடித்த ‘நாளை நமதே’ படத்தில் இடம் பெற்ற ‘நாளை நமதே’ பாடல் பாணியில் இந்த கவிதையும் தயாரிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...