குடியரசு தினத்தையொட்டி தில்லியில் தேசியக் கொடியேற்றினார் ராம்நாத்கோவிந்த்: கண்களைக் கவர்ந்த அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு

குடியரசு தினத்தையொட்டி, தலைநகர் தில்லியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் முதல் முறையாக தேசிய கொடியேற்றினார். இதைத் தொடர்ந்து, நடைபெற்ற அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

ஜனவரி 26

குடியரசு தினத்தையொட்டி, தலைநகர் தில்லியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் முதல் முறையாக தேசிய கொடியேற்றினார். இதைத் தொடர்ந்து, நடைபெற்ற அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. 



நாட்டின் 69-வது குடியரசு தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தில்லி ராஜபாதையில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசிய கொடியையேற்றினார். குடியரசு தலைவரான பிறகு முதல் முறையாக அவர் தேசிய கொடியேற்றினார். முன்னதாக, டெல்லி ராஜபாதையில் தேசிய கொடி ஏற்ற வந்த குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை பிரதமர் மோடி வரவேற்றார். பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் முப்படை தளபதிகளும் குடியரசுத் தலைவரை வரவேற்றனர்.



பின்னர், குடியரசு தலைவர் மறைந்த இந்திய விமானப்படை அதிகாரி ஜோதி பிரகாஷ் நிராலாவுக்கு அசோக் சக்ரா விருது வழங்கினார். குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டின் பெருமையை பறைசாற்றும் வகையிலும், பல்வேறு மாநிலங்களின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையிலும் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு நடைபெற்றது. டெல்லியில் இந்திய ராணுவத்தைப் பறைசாற்றும் வகையில் ஏவுகணை, பீரங்கிகள் அணிவகுப்பு நடைபெற்றது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆகாஷ் ஏவுகணை வாகனங்களும் அணிவகுப்பில் பங்கேற்றது. இதனை ஏராளமான பொதுமக்கள் அணிவகுப்பைக் கண்டு ரசித்தனர். 



குடியரசு தின விழாவில், மலேசியா, வியட்நாம், கம்போடியா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட 10 ஆசியான் நாடுகளை சேர்ந்த தலைவர்கள் முக்கிய விருந்தினர்களாக பங்கேற்று உள்ளனர். விழாவில் பங்கேற்க வந்த 10 நாட்டு தலைவர்களையும், பிரதமர் மோடி வரவேற்றார்.



டெல்லி போலீஸ், மத்திய பாதுகாப்பு படைகள் ஆகியவற்றை சேர்ந்த சுமார் 50 ஆயிரம் வீரர்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். 



தென்கிழக்கு ஆசியா கூட்டமைப்புடன் இந்தியா கொண்டுள்ள 25 ஆண்டு கால நட்புறவை குறிக்கும் விதமாக இந்த ஆண்டு ஆசியான் அமைப்பைச் சேர்ந்த 10 நாடுகளில் பல்வேறு துறைகளில் சிறப்பாக தங்களின் பங்களிப்பை அளித்து வரும் 10 பேருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கிக் கவுரவிக்கப்பட்டது. 

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...