தனது அரசியல் பயணத்திற்கு 'நாளை நமதே' எனப் பெயர் சூட்டிய கமல்

நடிகர் கமலஹாசன் தனது அரசியல் சுற்றுப் பயணத்திற்கு 'நாளை நமதே' எனப் பெயரிட்டுள்ளார்.

ஜனவரி 25

நடிகர் கமலஹாசன் தனது அரசியல் சுற்றுப் பயணத்திற்கு 'நாளை நமதே' எனப் பெயரிட்டுள்ளார்.

நடிகர் கமல் தீவிர அரசியலில் ஈடுபடப்போவதாக அறிவித்த நிலையில், வரும் பிப்ரவரி 21 ஆம் தேதியன்று குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் வீட்டிலிருந்து தனது அரசியல் பிரவேசத்தை துவங்க உள்ளதாகவும், அன்றே கட்சியின் பெயரையும் அறிவிப்பதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அனைத்து மாவட்ட நிர்வாகிகளுடனும் அவர் அண்மையில் ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில், நடிகர் கமலஹாசன் தனது அரசியல் சுற்றுப் பயணத்திற்கு 'நாளை நமதே' என பெயர் சூட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தை நாளை தமிழர்களுடையதாக, மனிதர்கள் வாழக்கூடிய பிரதேசமாக மாற்றுவதே 'நாளை நமதே' பயணத்தின் நோக்கம். அரசியல் பயணத்தின் முதல்கட்டமாக சில கிராமங்களை தத்தெடுக்க உள்ளோம். கிராமங்களைத் தத்தெடுக்கும் பணி நடந்து வருகிறது. விரைவில் ஹார்வர்டு பல்கலை.,யில் கிராமங்களை தத்தெடுப்பது குறித்து பேச உள்ளேன். கிராமங்களுக்கு உதவும் எண்ணம் அரசியல்வாதிகளிடம் குறைந்து விட்டது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...