ராஜீவ்காந்தி கொலை வழக்கு: குற்றவாளிகளை விடுதலை செய்வது குறித்து பதிலளிக்க 6 வாரம் கெடு

ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகள் விடுதலை தொடர்பாக தமிழக அரசு எழுதிய கடிதம் மீது 6 வாரத்தில் முடிவெடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கெடு விதித்துள்ளது.

ஜனவரி 23

ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகள் விடுதலை தொடர்பாக தமிழக அரசு எழுதிய கடிதம் மீது 6 வாரத்தில் முடிவெடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கெடு விதித்துள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 பேர் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளனர். குற்றம்சாட்டப்பட்ட 7 பேரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க, தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க தமிழக அரசு முடிவு செய்தது. அவர்களை விடுதலை செய்ய முடிவெடுத்து மத்திய அரசின் கருத்தை கேட்டு 2016 ஆம் ஆண்டு இரண்டாம் கடிதம் எழுதியிருந்தது.

ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த விசாரணையில் ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகளை விடுவிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என்று தெரிவித்தது. இதனிடையே, 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் தங்களை விடுவிக்குமாறு, தண்டனைப் பெற்றுள்ள 7 பேரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ராஜீவ் கொலை வழக்கின் இறுதி விசாரணை, உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது. இந்த வழக்கு நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு முன், இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ராஜீவ் கொலை வழக்கில் 7 பேரை விடுவிப்பது குறித்து 6 வாரத்தில் முடிவெடுக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டது. மேலும், இவர்களை விடுவிக்கும் அதிகாரம் யாருக்கு உள்ளது எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...