அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டைத் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் : சீறிப்பாயும் காளைகள்

ஜல்லிக்கட்டு தமிழகத்தின் பாரம்பரிய மற்றும் வீரவிளையாட்டு என உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டைத் தொடங்கி வைத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ஜனவரி 16

ஜல்லிக்கட்டு தமிழகத்தின் பாரம்பரிய மற்றும் வீரவிளையாட்டு என உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டைத் தொடங்கி வைத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

உலக பிரசித்தி பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று தொடங்கியது. ஜல்லிக்கட்டையொட்டி 1000-த்திற்கும் மேற்பட்ட காளைகள் அலங்காநல்லூர் வந்துள்ளன. முன்னதாக, 1,241 மாடுபிடி வீரர்கள் ஜல்லிக்கட்டில் பங்கேற்க பதிவு செய்துள்ளனர். அவர்களுக்கு முழு உடல் பரிசோதனை நடந்தது. இதற்காக 10 மருத்துவ குழுக்கள் உடல் பரிசோதனை செய்துள்ளனர். அதேபோன்று காளைகளை 12 கால்நடை மருத்துவ குழுக்களும் பரிசோதித்தனர். 

இதைத்தொடந்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் அலங்காநல்லூர் வருகை தந்து ஜல்லிக்கட்டு போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். முதலில் கோயில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. முதலாவதாக வந்த முனியாண்டி கோயில் காளைக்கு சிவப்பு கம்பள பரிசு வழங்கப்பட்டது. அதன்பின் போட்டி விறுவிறுப்புடன் நடந்து வருகிறது.

ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த காளையருக்கு முதலமைச்சர் சார்பில் கார் ஒன்று பரிசாக வழங்கப்பட உள்ளது. இதேபோல, சிறந்த காளைக்கு துணை முதலமைச்சர் சார்பில் கார் ஒன்று பரிசாக வழங்கப்பட உள்ளது. ஜல்லிக்கட்டை முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் ரசித்து பார்த்தனர். 

பின்னர், நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ஜல்லிக்கட்டை தமிழகம் மட்டுமின்றி, உலகம் முழுவதும் பார்த்து வருகின்றனர். இது தமிழகத்திற்கும், இளைஞர்களுக்கும் கிடைத்த பெருமை. வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டை தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டாக நாம் கருதுகிறோம். காளைகளை துன்புறுத்திடாமல் தங்களது குழந்தைகளை போல் உரிமையாளர்கள் வளர்த்து வருகின்றனர். என்றார். 

”ஜல்லிக்கட்டுக்கு தனி மைதானம் அமைப்பது குறித்து பரிசீலனை செய்து முடிவு செய்யப்படும்” எனத் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கூறினார். முன்னதாக விழா மேடையில் அவர் பேசுகையில், பல தடைகளை உடைத்து சட்டப் போராட்டம் நடத்தி ஜல்லிக்கட்டு நடந்துவருகிறது. ஜல்லிக்கட்டு இருக்கும் வரை ஜெயலலிதாவின் புகழ் இருக்கும், என்றார்.

இதனிடையே, அலங்காநல்லூரில் காளையர்கள் கோரிக்கையை ஏற்று கூடுதலாக ஒரு மணிநேரம் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படும் என முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் அறிவித்தனர். உலகப் பிரசித்தி பெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியின் போது அசம்பாவிதம் ஏதும் நிகழாமல் இருக்க பாதுகாப்பிற்காக 2 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...