அப்பல்லோ மருத்துவமனையில் ஜெ.,வை நேரில் பார்த்ததாக 4 பேர் வாக்குமூலம்

அப்பல்போல மருத்துவமனையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சைப் பெற்றுக் கொண்டிருந்த போது, அவரை நேரில் பார்த்ததாக 4 பேர் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

ஜனவரி 10

அப்பல்போல மருத்துவமனையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சைப் பெற்றுக் கொண்டிருந்த போது, அவரை நேரில் பார்த்ததாக 4 பேர் வாக்குமூலம் அளித்துள்ளனர். 

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் தனிநபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்துள்ளது. இந்த விசாரணை ஆணையத்தில் ஜெயலலிதாவின் உறவினர்கள், அரசு மருத்துவர்கள், முன்னாள் தலைமைச் செயலர்கள் ஆகியோர் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர். ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலாவின் உறவினரும், மருத்துவருமான சிவகுமார், உதவியாளர் பூங்குன்றன், தனி பாதுகாவல் அதிகாரி பெருமாள்சாமி ஆகியோருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டது.

அதன்பேரில், அவர்களும் நேரில் ஆஜராகி தங்களிடம் இருந்த ஆவணங்களை சமர்ப்பித்தனர். இந்த நிலையில், ஆறுமுகசாமி ஆணையத்தில் இன்று ஆஜரான ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவை நேரில் பார்த்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். இவரைத் தொடர்ந்து, முன்னாள் தலைமைச்செயலாளர் ராமமோகன ராவ், முன்னாள் அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், மருத்துவர் பாலாஜி உள்ளிட்டோரும் ஜெயலலிதாவை நேரில் பார்த்தாக வாக்குமூலம் அளித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...