தற்காலிக ஓட்டுநர், நடத்துநர் மூலம் பேருந்துகள் இயக்க நடவடிக்கை: அமைச்சர் விஜயபாஸ்கர்

பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் பேருந்து போக்குவரத்தை இயக்க தற்காலிக ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் தமிழகம் முழுவதும் தேர்வு செய்யப்படுவார்கள் என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

ஜனவரி 5

பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் பேருந்து போக்குவரத்தை இயக்க தற்காலிக ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் தமிழகம் முழுவதும் தேர்வு செய்யப்படுவார்கள் என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். 

ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை திமுக உள்ளிட்ட 13 தொழிற்சங்கங்கள் ஏற்க மறுத்ததால் பேருந்து ஊழியர்களின் வேலைநிறுத்தம் இன்று 2-வது நாளாக தொடர்கிறது. இன்று காலையில் ஒவ்வொரு டெப்போவிற்கும் அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் சென்று ஆய்வு செய்தார். பேருந்துகளை இயக்க நடவடிக்கை மேற்கொண்டார்.

பின்னர் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:- போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு 13-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையின்படி அடிப்படை சம்பளத்தில் இருந்து 2.44 காரணி மடங்கு ஊதிய உயர்வு அளிப்பதாகக் கூறியதை 30-க்கும் மேற்பட்ட தொழிற்சங்கத்தினர் ஏற்றுக் கொண்டுள்ளனர். ஆனால், 2.57 காரணி மடங்கு ஊதிய உயர்வு வேண்டும் என்று கூறி சில தொழிற்சங்கங்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. 22 முறை தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் மொத்த போக்குவரத்து தொழிலாளர்கள் 1 லட்சத்து 43 ஆயிரம் பேர் உள்ளனர். இதில் எங்களுடைய அண்ணா தொழிற்சங்கத்தில் மட்டும் 90 ஆயிரம் தொழிலாளர்கள் உள்ளனர். 70 சதவீத தொழிலாளர்கள் அண்ணா தொழிற்சங்கத்தில் உள்ளதால் இவர்களை வைத்து இன்று பேருந்துகளை இயக்கி வருகிறோம். எனவே, பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. உரிய பாதுகாப்புடன் அனைத்து பேருந்துகளும் இயக்கப்படும். 

போக்குவரத்து கழக வரலாற்றில் இவ்வளவு அதிக ஊதியம் இப்போதுதான் உயர்த்தி வழங்கப்படுகிறது. புதிய ஊதிய உயர்வு மூலம் அரசுக்கு வருடத்திற்கு ரூ.1000 கோடி செலவாகும். ஆனால், இதை ஏற்காமல் 13 தொழிற்சங்கத்தினர் அரசியல் செய்து வருகின்றனர். 36 சங்கங்கள் ஊதிய உயர்வை ஏற்றுக் கொண்டுள்ளன. எனவே தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தை கைவிட்டு பணிக்குத் திரும்ப வேண்டும். போராட்டத்தில் ஈடுபடும் தொழிற்சங்கத்தினர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். இனி அவர்களுடன் பேச்சுவார்த்தை இல்லை.

பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் பேருந்து போக்குவரத்தை இயக்க தற்காலிக ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் தமிழகம் முழுவதும் தேர்வு செய்யப்படுகிறார்கள். அவர்கள் மூலம் பேருந்துகளை முழுமையாக இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கான பணிகள் அந்தந்த போக்குவரத்து கழக நிர்வாக இயக்குநர்கள் மூலம் தொடங்கப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும்போதே திடீரென பேருந்துகளை நிறுத்தி பொதுமக்களுக்கு இடையூறு செய்வது முறையா? சங்கத்தை வளர்ப்பதற்காக இதுபோன்ற தவறான செயல்களில் ஈடுபடுகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...