தேர்தல் பணியாற்ற தவறிய நிர்வாகிகள் மீது நடவடிக்கை : திமுக கூட்டத்தில் தீர்மானம்

டிசம்பர் 29

ஆர்.கே நகரில் ஏற்பட்ட தோல்வியின் எதிரொலியாகத் தேர்தல் பணியாற்றாத நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக உயர்நிலைக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

ஆர்.கே நகர் தேர்தல் தோல்வி மற்றும் தற்போதைய அரசியல் சூழல் குறித்து முக்கிய முடிவுகள் எடுப்பதற்காக திமுகவின் உயர்நிலைக்குழு இன்று மாலை கூடியது. செயல் தலைவர் மு.க ஸ்டாலின் தலைமையில் கூடிய இக்கூட்டத்தில் அன்பழகன், துரை முருகன், கனிமொழி, ராசா உள்பட அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் 5 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. குறிப்பாக, தேர்தல் தோல்விக்கு முக்கிய காரணமாக கூறப்படும் நிர்வாகிகள் செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அதேபோல, தேர்தல் பணியாற்ற தவறிய நிர்வாகிகள் மீது நடவடிக்கை என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளன. இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா செய்த வேட்பாளர்களை தேர்தல் ஆணையம் தகுதி நீக்கம் செய்ய வேண்டும், ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைக்க மத்திய அரசு 13 ஆயிரம் கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும், பெரும்பான்மையை இழந்த அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணான அதிமுக அரசு ஜனநாயகத்திற்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதால், அதை நீக்கத் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...