அதிகாரம் உள்ளவர்களின் காலில் விழ வேண்டாம்: ரசிகர்களுக்கு ரஜினி அதிரடி உத்தரவு

அதிகாரம் உள்ளவர்களில் காலில் விழ வேண்டாம் என்றும், தந்தை, தாய் மற்றும் பெரியவர்களின் ஆசீர்வாதம் தேவைப்படும் என்பதால் அவர்களின் கால்களில் விழலாம் என ரசிகர்களிடம் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

டிசம்பர் 28

அதிகாரம் உள்ளவர்களில் காலில் விழ வேண்டாம் என்றும், தந்தை, தாய் மற்றும் பெரியவர்களின் ஆசீர்வாதம் தேவைப்படும் என்பதால் அவர்களின் கால்களில் விழலாம் என ரசிகர்களிடம் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் 3வது நாளாக சேலம், நாமக்கல், விருதுநகர், மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த தனது ரசிகர்களுடன் நடிகர் ரஜினி இன்று சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். 

அப்போது ரசிகர்களிடம் ரஜினி பேசுகையில், மதுரை என்றாலே வீரத்தின் அடையாளம். அங்கிருந்து வந்துள்ள உங்களையெல்லாம் பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. உங்களுக்கெல்லாம் கிடா வெட்டிக் கறி சோறு போட ஆசை. ஆனால், ராகவேந்திரா மண்டபத்தில் முழுக்க சைவம். வேறு இடத்தில் ஒருமுறை அதைப் பார்ப்போம். உங்களின் உற்சாகம் உணர்ச்சியைப் புரிந்துகொள்ள முடிகிறது. உங்கள் வயதைத் தாண்டி வந்தவன்தான் நானும். சலிப்பு இல்லாமல், காத்திருந்து என்னைச் சந்திக்கும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

நான் பெங்களூருவில் இருக்கும் போது ராஜ்குமாரின் ரசிகன். கடவுள், தாய், தந்தை ஆகிய மூன்று பேரின் காலில் மட்டுமே விழ வேண்டும். உயிர் கொடுத்தவர் கடவுள். உடல் கொடுத்தவர்கள் தாய்-தந்தை. அதற்கு பிறகு பெரியவர்கள் காலில் விழ வேண்டும். வயதான பெரியவர்கள் காலில் விழுவது ஏன் என்றால், இந்தக் கஷ்டமான வாழ்க்கையை நடந்து கடந்து வந்தவர்கள் அவர்கள். அந்த பாதைகளில் நாமும் நடக்கப்போகிறோம் என்பதால், அவர்களின் கால்களில் விழுந்து ஆசி பெறலாம். ஆனால், மற்றபடி, பணம், பதவி, புகழ், அதிகாரம் உள்ளவர்கள் காலில் விழ வேண்டிய அவசியமில்லை, விழாதீர்கள் என்று ரஜினி தனது ரசிகர்களிடையே பேசுகையில் கேட்டுக்கொண்டார்.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...