நாடு முழுவதும் ஜன.,7-ம் தேதி நீட் தேர்வு நடக்கிறது: தமிழகத்தில் சுமார் 20 ஆயிரம் பேர் தேர்வு எழுதுகின்றனர்

மருத்துவப் பட்ட மேற்படிப்புகளுக்கு ஜனவரி 7-ம் தேதி நீட் தேர்வு நடத்தப்படுகிறது. நாடு முழுவதும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் இத்தேர்வை எழுதுகின்றனர்.


டிசம்பர் 28

மருத்துவப் பட்ட மேற்படிப்புகளுக்கு ஜனவரி 7-ம் தேதி நீட் தேர்வு நடத்தப்படுகிறது. நாடு முழுவதும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் இத்தேர்வை எழுதுகின்றனர்.

நாடு முழுவதும் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் எம்டி, எம்எஸ் பட்டமேற்படிப்பிலும் பட்டய மேற்படிப்பிலும் (டிப்ளமோ) 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு 2018-19-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கை தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) மூலம் நடத்தப்படுகிறது.

தேசிய தேர்வுகள் வாரியம் நடத்தும் நீட் தேர்வுக்கு இணையத்தில் விண்ணப்பிப்பது கடந்த அக்டோபர் 31-ம் தேதி தொடங்கி நவம்பர் 27-ம் தேதி முடிவடைந்தது. தமிழகத்தில் அரசு, தனியார் மருத்துவர்கள் சுமார் 20 ஆயிரம் பேர் உட்பட நாடு முழுவதும் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். நீட் தேர்வு இணையம் மூலம் வரும் ஜனவரி 7-ம் தேதி நடத்தப்படுகிறது.

தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, நெல்லை, சேலம், திருச்சி உட்பட நாடு முழுவதும் 129 நகரங்களில் இத்தேர்வு நடக்கிறது. தேர்வு முடிவு ஜனவரி 31-ம் தேதி வெளியிடப்படுகிறது.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...