ராஜஸ்தானில் ஆய்வாளர் பெரியபாண்டியன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் : உண்மையை வெளியிட்டது தமிழக காவல்துறை

டிசம்பர் 26

ராஜஸ்தான் மாநிலத்தில் கொள்ளையனை பிடிக்கச் சென்றபோது உடன்சென்ற ஆய்வாளர் முனிசேகர் தவறுதலாக சுட்டதில் மதுரவாயல் ஆய்வாளர் பெரியபாண்டியன் மரணம் அடைந்ததாகத் தமிழக காவல்துறை இன்று அறிவித்துள்ளது.

சென்னை கொளத்தூரில் உள்ள நகைக்கடை ஒன்றில் நடந்த கொள்ளை சம்பவத்தில் முக்கிய குற்றவாளிகளான நாதுராம் உள்ளிட்ட 2 பேரை பிடிப்பதற்காக தனிப்படை போலீசார் கடந்த 8-ந்தேதி ராஜஸ்தான் மாநிலம் சென்றனர். கொளத்தூர் ஆய்வாளர் முனிசேகர், மதுரவாயல் ஆய்வாளர் பெரியபாண்டியன், போலீஸ் ஏட்டுகள் எம்புரோஸ், குருமூர்த்தி, முதல்நிலை காவலர் சுதர்சன் ஆகியோரும் உடன் சென்று இருந்தனர்.  ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டம் ஜெயத்ரன் தாலுக்கா ராமாவாஸ் கிராமம் தான் பயங்கர கொள்ளையன் நாதுராமின் சொந்த ஊர் ஆகும்.

ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள செயல்படாத தொழிற்சாலை கட்டிடம் ஒன்றில் பதுங்கி இருந்த நாதுராமை பிடிக்க ஆய்வாளர்கள் பெரியபாண்டியன், முனிசேகர் ஆகியோர் தங்களுடன் வந்திருந்த 3 போலீசாருடன் சுற்றி வளைத்தனர்.  இந்நிலையில், ஆய்வாளர் பெரியபாண்டியன் சுட்டுக்கொல்லப்பட்டார். ஆய்வாளர் பெரியபாண்டியனை ஆய்வாளர் முனிசேகரின் துப்பாக்கியால் தான் சுட்டுள்ளனர் என்றும், சுட்டது கொள்ளை கும்பலைச் சேர்ந்தவர்கள் தான் என்றும் சென்னை நகர உயர்போலீஸ் அதிகாரிகள் கூறினர். ஆனால், அந்த கொள்ளையன் யார்? என்பதை வெளியிடவில்லை.

இந்த நிலையில், பெரியபாண்டியனின் உடலில் பாய்ந்தது மற்றொரு ஆய்வாளர் முனிசேகரின் துப்பாக்கி குண்டு என ராஜஸ்தான் காவல்துறை  தெரிவித்தது. பெரிய பாண்டியனை காப்பாற்ற முயன்றபொழுது தவறுதலாக முனிசேகர் சுட்டுள்ளார் என பாலி மாவட்ட எஸ்.பி. கூறினார்.

இதனைத்தொடர்ந்து காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் சுட்டு கொல்லப்பட்ட விவகாரத்தில் காவல் ஆய்வாளர் முனிசேகர் மீது ராஜஸ்தான் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

அஜாக்கிரதையாக இருந்ததன் மூலம் உயிரிழப்பு ஏற்படுத்தியதன் கீழ் முனிசேகர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆய்வாளர் பெரியபாண்டியனை காப்பாற்ற முயற்சித்தபோது முனிசேகர்தான் தவறுதலாக சுட்டது உறுதியாகியுள்ளது. ஆய்வாளர் முனிசேகர் தவறுதலாக சுட்டதாகச் சென்னை போலீசார் இன்று உறுதிப்படுத்தினர். முனிசேகர் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து விசாரணைக்குப் பிறகு முடிவு எடுக்கப்படும் என தமிழக காவல்துறை கூறி உள்ளது.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...