ஜெயலலிதா மரண விவகாரம் : அண்ணன் மகன் தீபக்கிடம் 4 மணி நேரம் விசாரணை

டிசம்பர் 14

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அவரது அண்ணன் மகன் தீபக்கிடம்  4 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.

ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம், தனது விசாரணையைத் தீவிரப்படுத்தி உள்ளது. ஜெயலலிதா மரணம் குறித்து கருத்து தெரிவித்த பலருக்கு சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை நடத்தி வருகிறது.

இதுவரை விசாரணை ஆணையம் முன்பு திமுக மருத்துவர் அணி துணைத் தலைவர் டாக்டர் சரவணன், மருத்துவ கல்வி இயக்குநராக இருந்த விமலா, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை தலைவர் நாராயணபாபு, சென்னை மருத்துவக் கல்லூரி மயக்கவியல் துறை பேராசிரியை கலா, மருந்தியல் துறை உதவி பேராசிரியர் முத்துச்செல்வன், அரசு மருத்துவர் பாலாஜி, அக்கு பஞ்சர் மருத்துவர் சங்கர் ஆகியோர் ஆஜராகி விளக்கம் அளித்தனர். இவர்கள் தவிர, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, அவரது கணவர் மாதவன் ஆகியோரும் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து, ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் இன்று ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு ஏற்கனவே சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அதன்படி, தீபக் இன்று விசாரணை ஆணையத்தில் ஆஜர் ஆனார். அவரிடம் 4 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. ஜெயலலிதா மரணத்தில் உள்ள சந்தேகங்கள் மற்றும் அது தொடர்பான விளக்கங்களை தீபக்கிடம் நீதிபதி ஆறுமுகசாமி கேட்டார். அப்போது, பல்வேறு தகவல்களை நீதிபதியிடம் அவர் கூறினார். இவை அனைத்தும் வீடியோவாக பதிவு செய்யப்பட்டது. 

விசாரணை முடிந்த பின் அது குறித்து தீபக் கூறியதாவது:-  ஜெயலலிதா மரணம் தொடர்பாக இருந்த சந்தேகங்களை விசாரணை ஆணையத்திடம் தெரிவித்தேன். சந்தேகம் உள்ள நபர்களிடம் விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரிக்கை வைத்தேன். அனைவரையும் விசாரிக்க வேண்டும் எனக் கூறி உள்ளேன். என்றார். 

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...