டிச., 25-ம் தேதி குல்பூஷன் ஜாதவை சந்திக்கக் குடும்பத்தினருக்கு பாகிஸ்தான் அனுமதி


டிசம்பர் 08

பாகிஸ்தான் சிறையில் இருக்கும் இந்திய முன்னாள் கடற்படை அதிகாரி குல்பூஷன் ஜாதவை, டிசம்பர் 25 ஆம் தேதி சந்திக்க அவரது குடும்பத்தினருக்கு அந்நாடு அனுமதி அளித்துள்ளது.

உளவு பார்த்ததாகக் கூறி இந்திய முன்னாள் கடற்படை அதிகாரி குல்பூஷன் ஜாதவை சிறைபிடித்த பாகிஸ்தான், அவருக்கு மரண தண்டனை விதித்தது. பாகிஸ்தானின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த இந்தியா, இந்த விவகாரத்தைச் சர்வதேச நீதிமன்றத்துக்கு எடுத்துச்சென்றது. இதையடுத்து, குல்பூஷன் ஜாதவுக்கு தூக்குத் தண்டனை விதிக்கச் சர்வதேச நீதிமன்றம் தடை விதித்தது. இதனிடையே, பாகிஸ்தான் சிறையில் வாடும் குல்பூஷன் ஜாதவை சந்திக்க அவரது மனைவி மற்றும் தாயாருக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டது. 

இந்தக் கோரிக்கையை ஏற்றுள்ள பாகிஸ்தான், வரும் டிசம்பர் 25 ஆம் தேதி குல்பூஷன் ஜாதவை அவரது மனைவி மற்றும் தாயார் சந்திக்க அனுமதி அளிப்பதாகத் தெரிவித்துள்ளது. இந்தத் தகவலை பாகிஸ்தான் வெளியுறவு அலுவலக செய்தித் தொடர்பாளர் முகம்மது பைசல் தனது வாராந்திர செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். குல்பூஷன் ஜாதவை அவரது மனைவி மற்றும் தாயார் சந்திக்கும் போது இந்திய தூதரக அதிகாரிகளுடன் உடன் செல்ல அனுமதி அளிக்கப்படுவார்கள் எனத் தெரிவித்துள்ளார்.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...