ஜெ., மரணம் விவகாரம்: விசாரணை ஆணையத்தின் பதவிக்காலத்தை நீட்டிக்கத் தமிழக அரசுக்குக் கோரிக்கை

டிசம்பர் 8

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தின் பதவிக்காலத்தை மேலும் 6 மாதம் நீட்டிக்க வேண்டும் என நீதிபதி ஆறுமுகசாமி தமிழக அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்த, ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்திற்குக் கலச மஹாலில் அலுவலகம் ஒதுக்கப்பட்டு, டிசம்பர் 25 வரை 3 மாத அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக பலருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.. திமுக வழக்கறிஞர் சரவணன், ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா கணவர் மாதவன் பேட்ரிக், மருத்துவர் சிவக்குமார், அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது.

மேலும், சிலருக்கு சம்மன் அனுப்பியுள்ளதால், அவர்களிடம் விசாரணை நடத்த வேண்டியுள்ளது. எனவே, ஆணையத்திற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் போதுமானதாக இல்லை எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில், விசாரணை ஆணையத்தின் பதவிக்காலத்தை மேலும் 6 மாதம் நீட்டிக்க வேண்டும் எனத் தமிழக அரசின் பொதுத்துறைக்கு ஆறுமுகசாமி கடிதம் எழுதியுள்ளார்.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...