மும்பையில் கைதான கொலைக் குற்றவாளி தஷ்வந்த் போலீஸ் பிடியில் இருந்து தப்பியோட்டம்

டிசம்பர் 07

சென்னையில் தாயைக் கொன்று, 25 சவரன் நகைகளுடன் தலைமறைவான தஷ்வந்த் மும்பையில் கைது செய்யப்பட்ட நிலையில், போலீஸார் பிடியிலிருந்து தப்பியோடினார். 

சென்னை போரூரில் சிறுமி ஹாசினியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொலை செய்த குற்றவாளி தஷ்வந்த் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜாமினில் வெளிவந்தார். குன்றத்துாரில் 25 பவுன் நகைகளுக்காகப் பெற்ற தாயையே கொன்றுவிட்டு தஷ்வந்த் தலைமறைவாகினார். அவரைப் பிடிக்க மூன்று தனிப்படை அமைக்கப்பட்டது. தஷ்வந்த் நண்பர்களிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

இதனிடையே, 5 நாட்கள் தலைமறைவாக இருந்த தஷ்வந்த்தை, மும்பையில் போலீசார் நேற்று (டிச.,6) கைது செய்தனர். இதையடுத்து, அவரைத் தமிழகத்திற்கு கொண்டு வர அனுமதிக்கக்கோரி மும்பை பந்த்ரா நீதிமன்றத்தில் போலீசார் இன்று ஆஜர்படுத்தினர். சென்னை அழைத்துச் செல்ல அனுமதித்த நீதிபதி, நவ.,9ம் தேதிக்குள் ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டார். 

இந்நிலையில் நீதிமன்றத்தில் இருந்து திரும்பி செல்லும் வழியில், மும்பை விமான நிலையம் அருகே போலீஸ் பிடியில் இருந்து தஷ்வந்த் தப்பியோடினார். மும்பை போலீசாரின் உதவியோடு அவரைத் தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...