ஆர்.கே நகர் தேர்தலில் தினகரனுக்கு ”நோ” தொப்பி - தேர்தல் ஆணையம்

டிசம்பர் 7

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடும் தினகரனுக்கு தொப்பி சின்னம் ஒதுக்கப்படாது எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நமது கொங்கு முன்னேற்றக் கழக வேட்பாளர் ரமேஷுக்கு தொப்பி சின்னம் வழங்கப்பட்டது.  

ஆர்.கே. நகரில் சுயேட்சையாக போட்டியிடும் தினகரன், தனக்குத் தொப்பி சின்னத்தை ஒதுக்க வேண்டும் எனக் கோரியிருந்தார். ஆர்.கே. நகரில் மனு தாக்கல் செய்தவர்களில் 29 பேர் தொப்பி சின்னத்தைக் கேட்டு விண்ணப்பித்திருந்தனர். இந்நிலையில், வேட்புமனு பரிசீலனை இன்று (டிச.,7) நடந்தது. அப்போது, நமது கொங்கு முன்னேற்றக் கழகம் கட்சி வேட்பாளர் ரமேஷ், எழுச்சி தமிழர்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர் கேசவலு, தேசிய மக்கள் கட்சி வேட்பாளர் ரவி ஆகியோர் தொப்பி சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் எனக் கேட்டனர். 

பதிவு செய்த கட்சிகள் கேட்டதால், சுயேட்சையாக போட்டியிடும் தினகரனுக்குத் தொப்பி சின்னம் ஒதுக்கப்படாது என அறிவித்துள்ள தேர்தல் ஆணையம், நமது கொங்கு முன்னேற்றக் கழக வேட்பாளர் ரமேஷுக்கு தொப்பி சின்னத்தை ஒதுக்கியுள்ளது.

இதனிடையே, ஆர்.கே. நகரில் மதுசூதனனுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கக்கூடாது என டிடிவி தினகரன் எதிர்ப்பு தெரிவித்தார். மதுசூதனனின் படிவம் B-ல், அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி என 2 பேர் கையெழுத்திட்டதால், இரட்டை இலை சின்னம் ஒதுக்கத் தினகரன் தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...