வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலஅவகாசம் மார்ச் 31 வரை நீட்டிப்பு

டிசம்பர் 7

வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலஅவகாசத்தை மார்ச் 31-ம் தேதி வரை நீட்டிப்பதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அரசின் மானியங்களைப் பெற ஆதார் எண் கட்டாயம் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது. இதனால், வரும் டிசம்பர் 31-ம் தேதிக்குள் நாட்டில் உள்ள அனைவரும் வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என அறிவித்திருந்தது. இதனை எதிர்த்தும், ஆதார் இணைப்பிற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்கும் கால அவகாசத்தை நீட்டிக்கத் தயாராக இருப்பதாகக் கூறியது.

மத்திய அரசு பதில் பின்வருமாறு: மத்திய அரசின் 139 சேவை மற்றும் திட்டங்களுக்கு ஆதார் இணைப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 2018-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி காலக்கெடுவை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அறிவிப்பு முறைப்படி நாளை (டிச.,08) வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் மத்திய அரசு பதில் அளித்துள்ளது. 

இதனிடையே, செல்போன் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் கால அவகாசத்தை நீட்டிக்க முடியாது என்றும், செல்போன் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க பிப்ரவரி 6-ம் தேதி வரை கால அவகாசம் உள்ளது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

இதனையடுத்து, ஆதார் எண் கட்டாயமாக்குவதற்கு எதிரான வழக்குகள் மீது அடுத்த வாரம் விசாரணை நடத்தப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...